போட்டி கவிதைகள்
கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும்
ஊமை
உன்னை பிடித்தும்
விலகும் போது
வெறுத்தும் சேர்ந்து
இருக்கும் போது
உண்மையும் உணர்வுகளும் ஊமை ஆகி
பேச முடிந்தும்
மௌனம்
நிமிடமும்
வான் மழை பெய்ய முன்பும் வானவில்
பார்வைக்கு அழகாக ஒரு நிமிடம்
கண் மழை பெய்ய முன்பும் வானவில்
காதலியாக நினைவில் ஓவருநிமிடமும்
கண்
என் இதயம்
எனக்காக துடித்தாலும்
அதை நான் உணர்வது
நீ என் கண் முன்னே வரும் போது
நாணத்தில்
நொடிக்கு ஒரு தடவை
துடிக்கும் என் இமை
துடிக்க கூட மறந்தது
என்னை பார்த்த
நாணத்தில்
உன் கண் இமை துடிக்கும்
அந்த அழகை ரசிக்க
வழி
என் கண்கள்
உன் கண்களுடன்
பேசியதால் தான்
என் இதயம்
உன் இதயத்துடன்
காதல் கொண்டது
எம் காதலுக்கு
தூது விட்டது
நம் கண்கள்
நாம் இணைய வழி தந்த விழிக்கு
நன்றி
நாடி
அன்பு காட்ட
மட்டும் எனக்கு
தெரியவில்லை
அனால் உன் அன்பு கிடைக்காமல் துடித்தேன்
துடித்தேன் துடித்தேன்
என் நாடி துடிப்பு நிற்கும் வரை
நீ துடித்து
என்னை நாடி வந்து புரிந்து கொண்டாய்
ஒரு உயிருக்காக
இன்னோர் உயிர்
துடிப்பது தான் அன்பு என்று
பரிசு
என் முன்பே நீ கண் மூடி போனதால்
உன் பின்பே கல்லறை வர நினைத்தேன்
அதன் முன்பே என் கருவறை நீ வந்தாய்
அதுதான் அன்பே நீ தந்த கடைசி காதல் பரிசு
இமைகள்
எதிரில் இருந்தும் தூரத்தில் தெரிந்த நீ
இமைகள் மூடும் போது நெருக்கமாகுறாய்
எதிரில் இருந்தும் பிரிந்து இருப்பதாய் விட
இமைகள் மூடி இணைந்து இருப்பதே சுகம்