Wednesday 31 December 2014


யுத்தம் இல்லாது பந்தம் தொடங்க வேண்டும்

எதிரி இல்லாத ஒரு புது வாழ்வு வர வேண்டும்
அறிவாள் அழிக்க முடியாத அன்பு வேண்டும்
குறை கானது நிறை காணும் உள்ளம் வேண்டும்
புன்னகை குறையாத இன்முகம் வேண்டும்
பயம் நீங்க தனம்பிக்கை வரமாக வேண்டும்
உலகிற்கு ஒரு தேசிய கீதம் அன்பாக வேண்டும் 
குறையாத மூலதனமாக முயற்சி தொடர வேண்டும்




சந்தோசமும் சமாதானமும்
மலர்கின்ற புத்தாண்டில் தினம் தினம் நல் விருந்தாகட்டும்
By Heartbeat-santh


Monday 28 July 2014

கல்கி அவதாராம்

உழைக்க தெரிந்தால் நேர் வழி 
பிழைக்க தெரிந்தால் ஏமாற்று வழி  
இன்று எல்லோர் மனத்திலும் 
பண ஆசை பதவி ஆசை.. 
பணமும் பதவியும் வருமென்றால் 
கால் செருப்பாகவும் இருப்பர் , காலாலும் எட்டி உதைப்பார். 
போலிகளுக்கு தான் இன்று விலையும் மதிப்பும் உயர்வு!
நல்லவர் இறந்தாலும் கெட்டவர்க்கு இரக்கம் வர போவதில்லை!!! 
நல்லவர் கெட்டவர் ஆனால் கலியுக உச்ச கட்டம் 
கல்கி அவதாராம் நடந்தாலும் நடக்கும் !!! 

By HeartBeat-Santh

Saturday 21 June 2014

தாமரை மேல் உள்ள நீர் போல 
ஒட்டியும் ஒட்டாமலும் உன்  காதல் 
கடல் மேல் எழும் அலை போல 
ஓயாமல் பிரியமால் என் காதல் 
மீன் சுவாசிக்க நீர் வேண்டும் 
நான் சுவாசிக்க நீ வேண்டும் 

By HeartBeat-Santh

Thursday 19 June 2014

கண்கள் பேசாது 
இதயங்கள் பேசி 
காதல் பிறந்து இருந்தால் 
பார்வைகள் விலகும் போது காதல் பிரியாது 
இதயங்கள் துடிக்கும் வரை காதல் உயிர்த்திருக்கும் 

By HeartBeat-Santh


Sunday 1 June 2014

இசைஞானி இளையராஜா - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாலாட்டை தாய் பாடுவதற்கும் 
பிறர் பாடுவதற்கும் 
உள்ள வித்தியாசமே 
இசைஞானியின் இசை 

முதல் காதல் அனுபவம் 
தொடரும் இனிய தோழமை 
அன்னை மடியில் உறங்கும் சுகம் 
மழையில் நனையும் சுகம் 
சுகமான அனுபவங்களின் 
ஒட்டுமொத்த இசை வடிவம்
இசைஞானியின் இசை 

தனிமைக்கு துணை வருவது 
இருட்டிற்கு வெளிச்சம் தருவது 
துன்பத்தை மறக்கடிப்பது 
இதயத்தை துடிக்க வைப்பது 
இயற்கையான இசையை 
அறிவு கொண்டு ஆராயமால்
அனுபவம் தந்து ரசிக்க வைப்பது 
இசைஞானியின் இசை  

காற்றும் காதலும் உள்ளவரை 
இசைஞானியின் இசை இருக்கும் 

இசைஞானி இளையராஜா 
உடல் நல ஆரோக்கியத்துடன் 
நல் இசை தரும் அவரது பணியை தொடர 
நாங்கள் அனைவரும் சேர்ந்து 
அவரது இனிய  பிறந்தநாளில் 
வாழ்த்துவோம் 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 
இசைஞானி இளையராஜா

By HeartBeat-Santh


Saturday 31 May 2014

தக்கன பிழைத்து வாழ்தலில் 
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து 
வாழ வேண்டிய சூழல் வரலாம் அது இயற்கை 
ஆனால் ஆறாம் அறிவு கொண்ட 
மனித இனம் மட்டுமே 
தன் இனத்தையே தான் அழித்து 
பின் தற்பெருமையும் பேசும்!! 

By HeartBeat-Santh

Monday 26 May 2014

சுபம்

எமக்கெல்லாம் இரு இதயங்கள் 
ஒன்று எம்முள்ளே உள்ள இதயம் 
இன்னொன்று வெளியே உள்ள இதயம் இயற்கை 
உயிரோடு விளையாடாமல் 
உயிரோடு உயிராக 
உறவாடுங்கள் 
சுபம்

By HeartBeat-Santh


Saturday 24 May 2014

மனிதனுக்கும்
காவல் காக்கும் வெருளிக்கும் 
வித்தியாசம் இல்லை 
என் சொல்லாமல் சொல்லி 
பயந்து  பறக்கின்றன
இரை தேட வந்த 
பறவை கூட்டம் 

By HeartBeat-Santh

Thursday 22 May 2014

முற்று புள்ளி

மழையில் நனைந்தால் 
மரங்கள் துளிர்கின்றன 
மலர்கள் சிரிக்கின்றன 
மனிதன் மட்டும் தான் 
மரண பயத்தில்
குடை பிடிக்கிறான் 
ஆனந்தத்தின் 
முற்று புள்ளி 
அறிவு 

By HeartBeat-Santh


Wednesday 21 May 2014

தியாகி

மனதாலும் உடலாலும் 
பத்து மாதம் நொந்து 
பெற்ற தாய் தெய்வம் என்றால் 
தாயையும் சேயையும் சேர்த்து 
மரணம் வரை சுமக்கின்ற 
தந்தை அன்புக்குள் அடங்காத விந்தை 
வாழ்ந்து முடிந்த பின் 
கிடைக்கும் தியாகி பட்டம் 

By Heartbeat-Santh



Saturday 17 May 2014

நீதிக்கா நிதிக்கா

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனவரே 
முழு உலகும் நடிக்க உயிர் துடித்து இறந்தவரே 
முழுதாய் மனிதாபிமானம் செத்துவிட வில்லை 
ஒரு நாளாவது ஓராயிரம் பேர்களை நினைக்கின்றோம் 
அது கூட உங்கள் இறப்புக்கு நீதி கிடைக்க அல்ல நிதி திரட்டவே  
உங்களை கொண்டவன் ஒரு இனம் மட்டும் அல்ல 
இன வெறி பிடித்த வாழும் ஆடும் பிணங்கள் 
நீதியை கொன்றவினிடம் நீதி கிடைக்க வாய்ப்பில்லை 
இருந்தும் தொடர்கிறது உணர்வெழுச்சி 
பழிவாங்கவா இல்லை பாவ மன்னிப்பு கேட்கவா 

By HeartBeat-Santh

பரீட்சை

தேய்கின்ற நிலவை 
நிறுத்த முடியாது
முழுமதியானதும் 
சிறைபிடிக்கவும் இயலாது 
வாழ்க்கையில் வரும் 
துன்பத்தை  துரத்தவும் முடியாது 
இன்பத்தை நிறுத்தவும் இயலாது 
துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல 
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே 
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்  

By HeartBeat-Santh

Friday 16 May 2014

அனுபவம் அறிவு

அறிவு தரும் சுகம்  
பகலில் நித்திரை கொள்வது போல 
உண்ட பின் வரும் மயக்கம் போல 
உதவாமலே உறங்கும் 

அனுபவம் தரும் சுகம் 
இரவில் வரும் நிலா தரும் கவிதை போல 
குடைக்குள் ஒதுங்காது மழையில் நனையும் சுகம் 
அனுபவம் வாழ்க்கை.. கடவுள் தந்தது 
அறிவு அழிவு.. மனிதன் கண்டது

By HeartBeat-Santh


Thursday 15 May 2014

இரவும் அழகு.. பகலும் அழகு.. 
அது பார்ப்பவர் கண்ணில் மட்டுமல்ல 
மனங்களிலும் தங்கியுள்ளது! 
வலிகளில் தான் இன்பங்கள் பிறக்கின்றன 
பிறப்பு கூட ஒரு உதாரணம்! 
இன்பமே வாழ்வாயின் 
தாகத்தின் பின் அருந்தும் 
நீரின் இன்பத்தை உணர முடியாது!
இன்பத்தின் அளவுகோல் துன்பம்!!  

By HeartBeat-Santh

Wednesday 14 May 2014

முயற்சி

கடலை விட்டு 
தரை ஏற நினைக்கும் 
மீனின் முயற்சி போல் தான் 
பிடிக்காதவரை மணந்து 
பிடித்தமான வாழ்க்கையை 
வாழ நினைப்பது 
முயற்சி மூச்சு நிக்கும் வரை  

By HeartBeat-Santh

Friday 9 May 2014

தீண்டாமை

உனை தீண்டும் காற்று 
எனையும்  தீண்டும் 
தடுக்க முடியுமா 
உன்னால்! 
நீ பார்ப்பவை 
நானும் பார்க்க கூடும் 
மறைக்க முடியுமா 
உன்னால்!
தீண்டாமை 
ஒழிய சங்கம் நடத்தும் நீ 
காதல் மட்டும் தான் 
தீண்டாமையை 
ஒழிக்கும் என்பதை 
மறந்தாயோ மடந்தையே!!

By HeartBeat-Santh

Sunday 4 May 2014

வாழ்க்கை

போராட்டம்தான்  வாழ்க்கை 
உயிரை கொல்ல அல்ல உயிரை  காப்பாற்ற !
சாதாரணம் தான் வாழ்க்கை 
ஆகவே நீங்கள் சாதாரண மனிதர்கள் 
என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்!
சாதரணம் மட்டுமே இயற்கை 
மற்றவை எல்லாம் செயற்கை! 
உண்மையான ஊனம் என்பது 
தன்னம்பிக்கை இழப்பது! 
கடவுள் மீது குற்றம் சொல்லாதீர்கள் 
கடவுள் பறிப்பதை விட 
கொடுப்பதே  அதிகம்! 
அதை கண்டு பிடிபவர்தான் அரிது 
விரும்பியோ விரும்பாமலோ 
எல்லோருக்கும் வாழ்க்கைவரம்!! 

By HeartBeat-Santh

காதல் மொழி

விழிகள் மட்டும் 
பட பட வென பேச 
பிரியும் இதழ்கள் 
பிரிய முடியாது தவிக்க 
மொழிகள் சிறைப்பட 
இரு இதயங்கள்
முதன் முறை பேசிக்கொள்ளும் 
புது மொழி தான் 
காதல் மொழி 

By HeartBeat-Santh


Saturday 3 May 2014

இன்று நான் நாளை நீ !!

பழசுதானே
இனி வேண்டாம் என்று 
ஒரு ஓராமாய்
ஒதுக்கி விட்டாய் !
உயிர் இல்லாத 
எனக்கே இதை தாங்க முடியவில்லை! 
இந்த நாள் 
உனக்கும் வரும் வேளை
நீ என்ன செய்ய போகிறாய்!?

By HeartBeat-Santh


Friday 2 May 2014

கவிதை

கவிதை  எண்ணத்தில் மலர்ந்து
உள்ளத்தில் இடம் பிடிக்கும் 
இதயத்தில் சூடும் வாட மலர் 
எண்ணத்திற்கும் இதயத்துக்கும் 
இடையில் சிறைப்பட்ட 
இன்பமான வலி 
காதலும் கவிதையும் அனுபவத்திற்கு 
மட்டுமே புரியும் 

by Heartbeat-Santh


Thursday 1 May 2014

தனிமை

உன் வார்த்தைகள்
சொல்லா இல்லை முல்லா 
இரத்தம் சொட்ட வில்லைதானே 
என்று இரக்கமற்று பேசுகிறாயோ 
காயபட்டது உடல் அல்ல உள்ளமே
இதயம் இல்லாத உனக்கு 
என் இதயத்தில் ரத்தம் சிந்துவது 
தெரிய வாய்ப்பில்லை 
இனிமையின் தேடலில் 
கிடைத்ததோ தனிமை 

By HeartBeat-Santh

Tuesday 29 April 2014

வேஷம்

ஒருவருக்கு 
எதனால் சந்தோசம் 
என அறிந்தும் 
அதை உன்னால் செய்ய முடிந்தும் 
கண்டும் காணாததும் போல 
விலகி நடந்தால் 
ஒன்றில்  நீ தனியே நடக்கிறாய் 
அல்லது 
உன் கூட நடப்பவர்கள் 
உன்னை போல 
விஷம் உள்ள வேஷக்காரர்கள் 
இனம் இனத்துடன் சேரும் 

By HeartBeat-Santh

Sunday 27 April 2014

இசை

இசை 
இல்லமால் இருந்து இருந்தால் 
இருதயம் கூட துடிக்க 
வாய்ப்பு இல்லை 
ஏனெனில் 
இதயம் துடிப்பதும் 
ஒரு ஓசையில் தானே 

By HeartBeat-Santh


அம்மா


நாம் யாருக்கும் 
சுமையாக இருந்ததில்லை 
வேதனை கொடுத்தது இல்லை 
என்று சொன்னால் அது பொய் 
சுமையை கூட 
சுகமாய் சுமக்க முடியும் என்றால் 
கடவுளை கேட்டாலும் விடை 
அது அம்மா 

By heartbeat-Santh

Saturday 26 April 2014

காதல்

குருதியால் இணையாது 
உறுதியால் இணைந்து உறவு 
இன்னும் சொன்னால் 
உறவுகள் தோன்றுவதற்கே 
இறைவன் தனக்கு பிடித்த ஒன்றை 
முதலில் பூமிக்கு அளித்த பரிசு 
இயல்பான இயற்கையான 
ஒரு உணர்வு காதல் 

By HeartBeat-santh


Friday 25 April 2014

மழைக்காலம் 
நீண்ட பயணம் 
தெருவின் இரு பக்கமும் 
பெரும் மரங்கள் 
தெருவிற்கு கூரை அமைத்தது போல் 
ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல்
பச்சை இலை மேல் உள்ள மழைத்துளி 
பார்க்கும் போது ஏற்றப்படும் உணர்வு 
விபரிக்க முடியாத பெயரிடப்பதா 
புதிய உணர்வு 
வானொலியில் 
இளையராஜாவின்  காதல் பாடல்கள் 
ஆகா 
என்ன ஒரு இனிய பிரயாணம் 
முடிக்க விரும்பாத பயணம் 
என்றென்றும் நெஞ்சில் பசுமையாக 


நிகழ்காலம்

சில்லென்ற காற்று 
சிந்தனைக்குள் சிக்கல் இல்லை 
அருகில் இல்லாவிட்டாலும் 
அன்னையின் சேலை வாசம் 
கவலை இன்றிய தூக்கம் 
கடந்த காலம் பற்றி கவலையும் இல்லை 
எதிர்காலத்தை பற்றி கலங்கவும் இல்லை 
நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன் 

By heartbeat-Santh

யார் குற்றம்

எனை 
சிறைபிடிக்கும் உன் கண்கள் 
பயித்தியமாக்கும் உன் சிரிப்பு 
சூடேற்றும் உன் மூச்சு காற்று 
குளிர் ஊட்டும் உன் குணங்கள் 
உன் உணர்வுகளால்
என் உணர்வுகளை கொலைசெய்து 
உன் உடலால் 
எனக்கு தீ மூட்டுகிறாய் 
நீறானாலும் நீங்காது 
உன் நினைவுகள் 

By heartbeat-Santh


Wednesday 23 April 2014

அநாதையான அன்பு



ஒரு சூரியன் உலகத்திற்கே 
ஒளி கொடுகிறது 
எந்தவித பேதமுமின்றி 
ஆனால் மனிதன் 
தன் அன்பினை
சுயநலமாக 
பிறந்து இறக்கும் வரை  
ஒரு சிலருக்கு மட்டுமே 
பகிர்கிறான்  
அன்பு புத்தியில் இருந்து வருகிறதா? 
இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா?
ஒரு வேளை சிறு இதயம் தானே 
என நினைத்து 
பல இதயங்களுக்கு இடம் இல்லையோ?
இல்லை  அல்லது 
அன்பு என்ற பெயரில் பல 
இதயங்களை சிறை பிடிக்க 
மனம் இல்லையோ தெரியவில்லை 
எது எப்படியோ 
இன்று அன்பு கூட அனாதையாக 
யாரும் ஆதரிப்பார் இல்லை 

By Heartbeat-Santh


Monday 21 April 2014

இரு இதயங்கள்


#இரு_ இதயங்கள்

நீ நடமாடும் வாடா மலர் 
வந்த நொடி ஓடி போகும் வானவில் கூட 
உனை கண்ட பின் 
மறைய மறந்து விட்டது 

சூரியனுக்கு என்மேல் பொறாமை 
நீ விழித்துக்கொள்ள 
என் நினைவுகள் காரணமாவதால் 

தாயின் கருவறையில் 
இருந்து மறந்த  சுகத்தை 
எம் இதயம் இணைந்த பின் உணர்கிறேன்!
மீண்டும் இரு இதயங்கள் துடிக்கும் ஓசை 

By Prasanth Satkunanathan ( HeartBeat )

Friday 18 April 2014

கண்ணாடி

நீ 
நிழல் காட்டும் 
உடைக்க முடிந்த 
நிழல் கண்ணாடி அல்ல

நீ 
என்பதே  நான் என்பதை 
உணர்வாலும் உண்மையாகவும் 
நிஜம் காட்டும் 
உடைக்க முடியாத 
உயிர் உள்ள கண்ணாடி. 

By HeartBeat-Santh



Thursday 17 April 2014

சுகம் சுகமே

உன் நெஞ்சின் ஏக்கத்தை 
இதயமும் இதழ்களும் 
மறைத்தாலும் 
உன் கண்கள் சொல்ல வருவதை 
நீ சொன்னாலும் தடுக்க முடியவில்லையே 
உன் மூச்சு காற்றின் வேகம் 
என்னை தூக்கி எறியவில்லை
தொட்ட அணைக்க வா என்கிறது 
இது சுனாமியிலும் 
நீச்சலடிக்கும் சுகம் சுகமே!! :)

By HeartBeat-Santh

Sunday 13 April 2014

ஈர் உடல் ஓர் உயிர்

கள்ளம் கபடமற்ற 
வயதில் தொடங்கிய நம் நட்பு 
இன்றும் அவ்வாறே தொடர்கிறது  
இன்றும் நமக்குள் 
ஒழிவு மறைவு இல்லை 
அந்த ஒரு உறவுக்கு முன் 
வேறொன்றும் தேவை இல்லை 
ஈர் உடல் ஓர் உயிர் என்பது 
உண்மையில் புரிந்த 
நெடு நாள் நட்புக்குள் தான் உண்டு 

By HeartBeat-Santh

Saturday 12 April 2014

சதி சட்டம்


மனசாட்ச்சி இல்லாதவனை 
தண்டிபதர்க்கு சட்டம் உருவானதா 
இல்லை 
சட்டம் தெரிந்தவன் 
சட்டம் தெரியாத அப்பாவிகளை 
தண்டித்து 
தப்பானவர்களை தப்பிக்க வைக்கவா ?

By HeartBeat-Santh

Thursday 10 April 2014

குழந்தை (ஆகா) ஆசை


அறிந்தும் அறியாமலும் 
அடம் பிடிக்கும் குழந்தையை 
மற்றவர்க்கு பிடிக்கும் போதும் 

மனம் விட்டு  
சிரிக்கும் மழலையை 
காண்பவர் எல்லாம் ரசிக்கும் போதும் 

எல்லோரும் நேசிக்கும் 
அந்த குழந்தை பருவத்தை 
எப்படி என்னால் கடந்து வர முடிந்தது??

By HeartBeat-Santh


Wednesday 9 April 2014

பண மாற்றம்

நான்கு சுவற்றுக்குள் 
எனக்கும் சுவற்றுக்கும் 
தெரிந்த உண்மை 
வெளியில் சொல்வது போல 
நான் கிறுக்கன் அல்ல 
ஓவியன் என்று 
கலை உண்டு  பணம் இல்லை 
ஆகவே நான் கிறுக்கன் 
பணம் உண்டு கலை இல்லை 
கிறுக்க மட்டுமே தெரிந்தாலும்
உலகம் போற்றும் ஓவியன் 

By HeartBeat-Santh

Sunday 6 April 2014

அச்சம் தவிர்

பெத்தவள் அணைப்பில் 
மரணம் வந்தாலும் 
மறு பரீசிலனை பண்ணும் 
மண்டி இட்டு 
புன்னகை செய்து 
பிரிக்காது பிரியாவிடை பெறும் 

By HeartBeat-Santh

Saturday 5 April 2014

கண்ணீர்

உன் கண்ணீருக்கு காரணமானவர் 
நீ கண்ணீர் விடுவதால் கரைய போவதில்லை 
கறை பட்ட இதயத்தை கழுவவே கண்ணீர் 
கண்ணீர் மட்டும் இல்லை என்றால் 
இதயம் உடலை கிழித்தெறிந்து 
இரத்தம் சிந்தி அழுதிருக்கும் 

By HeartBeat-Santh

Friday 4 April 2014

காதல் கோவம்


குடை கொண்டு அவள் நடந்தால் 
மழைக்கு அவள் மேல் கோவம் 
மழைக்கும் அவள் மேல் காதல் 
குடை கொண்டு தடுத்தால் 

குடை இல்லாது அவள் வந்தால் 
எனக்கு மழை மேல் கோவம் 
நான் தீண்ட முடியாத அவளை 
மழை தீண்ட முடிந்ததே என்று 

By HeartBeat-Santh

Thursday 3 April 2014

பகல் கனவு

இறக்கை இருக்கும் போது பறக்கமால் 
சிறைக்கு வந்த பின் பறந்து செல்ல 
துடிக்கும் பறவையின் நிலையும்
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்லாமல் விட்ட காதலை 
காலம் கடந்து சொல்ல துடிக்கும் 
காதலர்கள் நிலைமையும் 
பகல் கனவு காண்பது போல் 

By HeartBeat-Santh 

Tuesday 1 April 2014

திறமை


ஒரு சூரியன் முன் 
ஓராயிரம் மின் விளக்குகள் 
எரிந்தாலும் என்ன பயன் 
உண்மையான திறமை 
உயர்ந்த வானம் போல் 
எட்டுவதும் கடினம் 
எட்டி மிதிக்கவும் முடியாது 

By HeartBeat-Santh

Sunday 30 March 2014

விழி வழி

மை இட்ட உன் விழியால் 
நீ என் நெஞ்சில் எழுதிய 
வாசிக்க முடியாத 
உணர முடிந்த 
உயிர் உள்ள கவிதைதான் 
நம் காதல் 

By HeartBeat-Santh 


Wednesday 26 March 2014

தாலாட்டு

தொட்டிலில்  ஆட்டி 
தூங்க வைப்பதை பார்த்தது உண்டு 
எனக்கும் நடந்திருக்கும் 
ஆனால் ஞாபகம் இல்லை 
ஆனால் உன் நெஞ்சிலே 
தொட்டில் ஆனா நாள் முதல் 
தூக்கமும் இல்லை துக்கமும் இல்லை 
இந்த ஞாபகம் தொலைய போவதும் இல்லை 

By HeartBeat_Santh



Tuesday 25 March 2014

சிற்பி

உயிர் ஒன்று உருப்பெற 
இடம் தந்தவள் தாய் 

உலகின் சிகரம் தொட 
கரம் தந்தவர் தந்தை 

தன் மூச்சில் எனை 
சுவாசிக்க வைத்தவள் தாய் 

தன் மூச்சு இருக்கும் வரை 
எமை செதுக்கிய சிற்பி தந்தை 

By HeartBeat_Santh



Sunday 23 March 2014

என்ன இனம் ??

கருணையும் காதலும் 
இல்லை என்றால் 
நீ விலங்கும் இல்லை 
வேற ஏதோ ஒரு பிறப்பு 
சக மனிதரை கொன்று 
வென்று வாழ நினைக்கும் 
புதுமையான சிரிக்க தெரிந்த 
நகருக்குள் வாழும் ??

By Heartbeat_Santh

Friday 21 March 2014

ஈர இதயம்

ஈர நிலத்தில் நீ நடந்து 
வழுக்கி விழும் போதெல்லாம் 
ஈர நிலம் என் இதயம் ஆகாத  
என என்ன தோன்றுகிறது 
அப்போதாவது ஒரு முறையேனும்  
என் இதயத்தில் விழுவாய் அல்லவா ;)

By HeartBeat-Santh