Tuesday 16 January 2018

இசை

இசை

கடவுளின் உள்ளத்தை கவர்ந்த தேன் மொழி
இறைவனிடம் பேச மந்திரம் தேவை இல்லை
இசை எனும் இனிய மொழி இறைவனை அடைய வழி!

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும்  இசை உண்டு
காற்று  கலந்த எதிலுமே இசை கருப்பெறும்
இசையின் சுவாசம் இதயம் துடிக்கும் வரை

குழந்தையின் சிரிப்பு புன்னகை இசை
மங்கையரின் சிரிப்பு மன்மத இசை
ஆண்களின் சிரிப்பு வீர இசை
இசை மூலமே உணர்வுகளின் நிஜ பரிமாற்றம்

தனிமை நீக்கும் இசை உறவாக
துன்பத்தை நீக்கும் இசை துணையாக
வன்மத்தை நீக்கும் இசை வரமாக
இசை போதும் இங்கு அநாதைகள் யாருமில்லை

உலகை இணைக்கும் உறவு பாலமாய் இசை
உலக சமாதான தேசி கீதம் இசை
யாராலும் வெறுக்க முடியாத , பிரிக்க முடியாத
தாய் போல் அரவணைப்பு இசை


இசை இல்லா வாழ்க்கையில் இன்பம் கசக்கும்
இசை உள்ள வாழ்வில் துன்பமும் நிலை இல்லை
இசை ஒன்றே மனிதனை புனிதனாக்கும்
புனித இசையே பூமியை அழகாக்கும்

By Prasanth satkunanathan ( Heartbeat)