Tuesday 17 April 2018

காரணம்



காரணம்

வாழப்  பிறந்த நாம்
வாழ்ந்து முடிப்பதற்குள்
செத்து செத்துப் பிழைக்க காரணம்
ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவற்ற செயல்களே

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
இடம் பெறும் தீமைகளின்
அடிப்படைக் காரணம்
இயற்கையுமில்லை இறைவனுமில்லை , மனிதனே!

நாம் மனிதர் என்று ஏற்காது
மனிதனில் புனிதானாய் அறிஞ்னாய்
அடையாளப் படுத்திய காரணம்
மனித ஏற்ற தாழ்வுகளின் ஆரம்பம்

சுய லாப நோக்கங்களிற்க்காக 
மனித உணர்வுகளை வியாபாரமாக்கி
பணம் கண்ட காரணம்
கற்பும் காசென்றால் விலை போனது

இறை வழி பாடும் நம்பிக்கையும்
மனிதனை நல் வழி படுத்தவே
பக்தியை மிஞ்சிய ஒரு பயமே காரணம்
இல்லை எனில் உடன்  இறக்கும் மனிதம்


மனித உணர்வுகளில் வேறு பாடில்லை
மனித ஆசையிலும் அறிவிலுமே
உணர்வுகள் ஆசைகளை அடக்காத காரணம்
மனிதன் சக மனிதனை மதிக்காது எதிரியானான்
மனித ஒழுக்க நற் பண்புகளை
சட்டங்கள் ஆயுதங்களால் நெறி படுத்த முடியாது
சட்டங்கள் மீற சட்டங்கள் காரணம்
போர்கள் தொடர ஆயுதங்கள் காரணம்

புரியாமல் விமர்சிக்காதீர்கள்
அறியாமல் ஆத்திரப்படாதீர்கள்
அன்பு செய்யக் காரணம் தேவை இல்லை
நட்பாய் இருக்க தகுதி தேவை இல்லை

என்நிலை வந்தாலும் மனிதனாய் இருக்கங்கள்
யாராக  இருந்தாலும் மனதாரப் பழகுங்கள்
தீமை யார் செய்தாலும் காரணம் நீயும் ஆவாய்
மனிதனாய் நீயும் இரு பிறரையும் இருக்க விடு

By Prasanth satkunanathan ( HeartBeat)

Tuesday 3 April 2018

மீண்டும் மலர வேண்டும் மனித நேயம்

மீண்டும் மலர வேண்டும்  மனித நேயம்

இயந்திரமாய் மாறி விட்ட இவ்வுலகில் இன்று
மனித இதயம் மிக இறுகி தான் போய் விட்டது

ஆறு அறிவு படைத்த அழகிய மனித இனம் இன்று
நகரத்துள் வாழும் விலங்கு போல் ஆகி விட்டான்

எம்மை படைத்து காத்து நிற்கின்ற இரு கண்ட 
தெய்வங்கள் ஒன்று தாய் ,இன்னொன்று பூமி தாய்

அன்று மனிதன் தாயை,பூமியை வணங்கி பலன் கண்டாண்
இன்றைய மனிதன் அதை தூசித்து துயரம் கொள்கிறான்

இன்று மனித நேயம் வாழுமே ஆனால் அது இருப்பது மழழைகள் சிரிப்பிலும் அவர்களின் அழுகையில் மட்டுமே

அன்பின் ஒற்றை சாட்சி உன் சந்தோச/துக்க தருணத்தில்
நீ விடும் கண்ணீர் ஒன்றே,அன்பே இல்லை கண்ணீர் எப்படி?

மூட நம்பிக்கை குறைந்ததது ஒரு முன்னேற்றம் என்றாள்
மற்றவர் மேல் நம்பிக்கை அற்று போனது அதோ பரிதாபம்

நீ பெரிதா  நான் பெரிதா என ஓடும் மானிடா
இறுதியில் நீ ஓடி சேரும்  இடம் ஒன்றுதான் அது சுடு காடு

சிரிக்க நேரம் இல்லை, அழவோ அறவே பிடிக்கவில்லை
நீ அன்பும் காட்டவில்லை ,இறுதியில் உன் கூட யாருமில்லை

மரணவீடுகளில் இன்று மணவீடுகளுக்கு நிகரான கொண்டாட்டம்
சாட்டுக்கு ஒலி பெருக்கி முன்னால் ஒரு சொட்டு கண்ணீர்


அன்பு, நட்பு, காதல்,இன்று வெறும் ஆடம்பரமான  வார்த்தைகள்
உண்மையில்  யாருக்கும் உண்மையான  ஒரு உறவு இல்லை

இயற்கையை மனிதன் பூசித்தான் பின் அழித்து ருசி கண்டான்
இன்று இயற்கை அவனுக்கு பாடம் கற்பிக்கிறது சுனாமியாக 

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் உள்ள ஒரு குறுகிய காலம்
அதில் நாம் பணத்துக்கும் பகட்டுக்கும் பகடகாயகிவிட்டோம்

சுயநலம்,பொறாமை ,போட்டி,பணம்,போதை,காமம்,பேராசை நம்பிக்கையின்மை  இவற்றில் ஏதேனும் ஒரு பாதிப்பின்றி  யாருமில்லை

நிம்மதியான் உறக்கம்,இனொருவரை கண்டால் அகம் மலர்தல்,
மனம்விட்டு சிரித்தல், மற்றவரை பாரட்டல்,உன்னால் முடியுமா?

தேய்பிறையாகவே இருக்கும் மனித நேயம் ,வளர் பிறையாவது
ஒவ்வொருவர் கையிலும் உள்ளது.. உன்னால் முடியும்!!

மனித நேயம் நம்முள் மீண்டும் மலர வேண்டும் 
அனைவரும்மனம்விட்டு சிரிக்க வேண்டும் 
கண்கள் கண்ணீர் காணும்வரை

By HeartBeat-Prasanth Satkunanathan