Tuesday 26 June 2018

#சேலை


#சேலை


தமிழ் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாய் தமிழ் மான காப்பாய் தாய் நாட்டின் உயர்வாய் பல வண்ண சேலைகள் நடமாடும் வானவில்லாய் சேலைகள் பூமி எங்கும் புன்னகைக்கும் கோலங்களாய் சேலை அணியும் பெண்கள் யாவருமே மெய்யாகவே விழி வியக்கும் உலக அழகு சேலையின் மதிப்பு விலை அடைப்படையில் மாறலாம் விலை மதிப்பற்ற அழகு என்பது சேலையில் பெண்கள் பெண் தெய்வங்கள் சேலையில் தரும் உணர்வு தாய்மை பெண்கள் சேலையில் வந்தால் லக்ஷ்மி கடாட்ஷம் சேலையில் பெண் தெய்வங்கள் தெய்வீக பேரழகு சேலை கட்டிய பெண்களில் தெய்வம் தெரிவது பெண் பாதுகாப்பு அம்மாவின் சேலை சுக உறக்கம் தந்த ஆனந்த தொட்டில் அம்மாவின் சேலையில் சுவாசமும் வாசமும் அன்பின் எல்லை அம்மாவின் சேலையில் பயமற்ற பாதுகாப்பு வாழ்வு அம்மாவின் சேலை அரவணைப்பு ஆயுட்கால நிகரற்ற ஆனந்தம் பெண் அழகிற்கு பெருமை சேர்த்து பெண் மானத்திற்கு காவல் காத்து உலகெங்கும் தமிழ் அடையாளமாய் வலம் வரும் சேலையின் வரமும் வாழ்வும் பெண்கள் பெற்ற கொடை



By - Prasanth Satkunanathan


Tuesday 12 June 2018

#கவிதை

#கவிதை 

காதலித்துப்  பார் கவிதை வரும் 
இயற்கையை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
இசையை  கேட்டுப்  பார் கவிதை வரும் 
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்

உலகத்தை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
உலகத்தை வெறுத்துப்  பார் கவிதை வரும்
தோல்வி கண்டு பார் கவிதை வரும்
வெற்றி கண்டு  பார் கவிதை வரும்

கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இளமையை  ரசித்துப்  பார் கவிதை வரும்
முதுமையை மதித்துப்  பார் கவிதை வரும்

உண்மையை  உணர்ந்து பார் கவிதை வரும்
பொய்மையை  விரட்டி பார் கவிதை வரும்
உறவுகளை விரும்பி பார் கவிதை வரும்
உறவுகளை இழந்த பின் பார் கவிதை வரும் 

நீதியாய் நடந்து பார் கவிதை வரும்
அநீதியை கடந்து பார் கவிதை வரும்
நீ கவிதையை ரசித்துப்  பார் கவிதை வரும்

உள் உணர்வுகள் சொற்களாய் மொழி மாறும் 
விழி வழி கண்டவை இனி சொல் வழி காண்பாய்
இதயத்துடிப்பினை இனி எழுத்தினில் உணர்வாய் 
உணர்வும் மொழியும் இணைய கருவாகவும் கவிதை


காட்சிகள் மீது கண்கள் கொண்ட காதல் கவிதை 
இயற்கையை ரசிக்கும் இதயத்தில் உதயம் கவிதை 
விழிகளில் அழகானவை மொழிகளில் பேரழகாகும் 
உருவங்கள் மறைந்தாலும் எழுத்தினில் உயிர்வாழும்


கண்களில் விழுந்து எண்ணங்களில்  மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் எண்ணங்களிற்கு  வழி விடு
உன்னில் இருந்தும்  தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

By Prasanth Satkunanathan (HeartBeat)