Tuesday 25 December 2018


கொண்டாட்டம்

உணர்வுகளின்  உற்சாக எல்லை
மனங்களில் எழும் -மகிழ்ச்சி அலை
எண்ணங்களின்  -நல்லெண்ண நிலை
குறை களையும் -கொண்டாட்ட வேளை  

ஜனனத்தில் ஆரம்பமாகும் கொண்டாட்டம்
வருடா வருடம் வரும் சந்தோசப்  பிறந்த நாள்
பிறந்த குழந்தை பெயர் சூட்டின, அம்மா அப்பா
பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் இன்ப வர பரிமாற்றம்

ஒவ்வொரு மொழிக்கு ஓவ்வொரு கலாச்சாரம்
பண்பாடு சொல்லும் பல நூறு கொண்டாட்டங்கள்
கொண்டாட்டங்கள் வேறு கொடை மட்டும் இன்பம்
முடிவில்லா கொண்டாட்டமே உலகின் இன்ப முகம்

பிள்ளைகளின் கொண்டாட்டம் நல் ஆரோக்கிய சமூகம்
பெற்றோரின்  கொண்டாட்டம் முதியோர் இல்ல குறைவு
உறவுகளின் கொண்டாட்டம் ஒற்றுமையின் தொடக்கம்
பள்ளியின் கொண்டாட்டம் பட்டதாரிகளின் அணிவகுப்பு
காதலின் கொண்டாட்டம் திருமணம்
நட்பின் கொண்டாட்டம் அநாதை உணர்வின் அழிவு
நாட்டின் கொண்டாட்டம் சிறைச்சாலைகளின் நீக்கம்
உலகின் கொண்டாட்டம் ஆயுதங்களின் ஓய்வு

கொண்டாட்டங்கள் நல் இன்ப கொடை
தவிர்க்கக்  கூடாத சந்தோச வரங்கள்
கொண்டாடுங்கள் குறைகள் யாவும் நிறைவாகும்

இதயங்களை இணைக்கும் இன்ப வழி கொண்டாட்டங்கள்    

By Prasanth Satkunanathan 

Tuesday 11 December 2018

#தன்னம்பிக்கை

#தன்னம்பிக்கை 


முடியாது என்று சொல்வது - சொல்பவரின் ஊன எண்ணம்.
முடியும் என்று சொல்வது- உனக்கான வெற்றியின் மூலதனம்.

வலி என்னும் உளி கொண்டுதான் -தன்னம்பிக்கை எனும் சிலை உருவாகும்
தன்னம்பிக்கை தருமெனின்  - வலி எனும் சாபம் கூட வரமாகும்

குழந்தைகளின் குறும்புகளை - குட்டிக்குட்டி ஊனமாக்காதீர்
குழந்தைகளை சலித்துப் பார்க்காது  - சாதனையாளர்களாகப் பாருங்கள்

பிழை விட்டு அறியும் சரியான பாடங்களே - வாழ்க்கையில் மறக்காது நிலைக்கும்
பயந்து உடைவதல்ல பட்டு உணர்வதே வாழ்க்கையின் உயர்வு

பிழைகளை சுட்டிக்காட்டும் போது பணிந்து கேள்
பிழைகளை குத்திக் காட்டும் போது நிமிர்ந்து செல்
இயலாமையின் மொழி குறை பேசுவது!

உனக்கு பிறர் மீதான நம்பிக்கை மாறலாம்  -பிறருக்கு உன் மீதான நம்பிக்கை மாறலாம்
ஆனால் உனக்கு உன்மீதான நம்பிக்கை மாறக்  கூடாது - பிறர் மாற்றவும் விடக் கூடாது

முயற்சியே செய்யாதவன் முயற்சிப்பவனைப் பார்த்து கேலி செய்வான்
கேலியும் கிண்டலும் இயலாமையின் குண இயல்பு
ஆக்கமும் ஊக்கமுமே தன்னம்பிக்கை உணர்வு

தேய்கின்ற நிலவை
நிறுத்த முடியாது
முழுமதியானதும்
சிறைபிடிக்கவும் இயலாது

வாழ்க்கையில் வரும்
துன்பத்தை  துரத்தவும் முடியாது
இன்பத்தை நிறுத்தவும் இயலாது

துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்

தன்னம்பிக்கை என்பது
வெற்றியின் ஊக்கம் 
பயத்தின் நீக்கம்
நேர்மையின் அடையாளம் நேசத்தின் உணர்வாலயம்
அறிவின் ஆக்கம் அறியாமையின் அழிவு
தன்னம்பிக்கியை  - உனக்கு நீயே  - வரம் கொடுக்கும் சாமி

வரம் கொடு வாழக்கை வளமாகும்.

By Prasanth Satkunanathan