Tuesday 22 January 2019

காதலுடன்!

காதலுடன்!



கண்கள்  இணைந்து  கருக்கட்டிய  காதலை
கண்ணும்  கருத்துமாக  வளர்ப்பது  காதலர் கடமை
காதலுக்கு  பிடித்த  விடயங்களின்  பட்டியல் நீளும்
காதலை  வெளிப்படுத்தும்  விதமே காதலின் ஆயுள்

கடற்கரை  ஓரம்  கை  கோர்த்து  நடக்கும் நேரம்
கடற்காற்று  கலந்த  தந்த  சுவாசம் காதலின் நேசம்
கடல் அலைகள் கால் நனைத்த ஈர சுகம்
மன அலைகள் குளிர்ந்த மாயம் காதல்

நிலவின் ஒளியில் காதல் கண் விழிக்கும்
மொழிகள் இன்றி விழிகள் கவி எழுதும்
இரவின்  மடியில்  விழிகள்  தூக்கமின்றி துடிக்க
நட்சத்திரங்கள்  கண் சிமிட்ட கற்றுக் கொள்ளும்

பூக்களின்  தற்பெருமை  காதலும் மலர்வதால்
காதலதும்  பூக்களதும்  புன்னகை வேறல்ல
காதல் குடி  இருக்க விரும்பும் வீடு பூங்காவனம்
காதலின் பெருமை  மலர்கள்  காதலின் அடையாளம்

இடைவெளி  குறைந்த  இடைவேளை அற்ற
முற்றுப்பெறாத  முழுவதும் மறந்த பயணம்
இசையும்  இணைய இதயம்  இனிக்க இன்பம்
சொர்க்கலோகம்  உலா வரும் காதல் பயணம்

காதலுடன் ஆலய தரிசனம் ஆனந்தம்
காதல் கைகளால் இடும் வீபூதி சந்தானம் இன்பம்
அருகருகாக ஆலய வலம் அன்பு விழா 
சாமி அள்ளி வழங்கும் வரம் அன்பு வளம்

எதிர்பாரா  இன்ப  பரிசில்  பரி மாற்றங்கள்
இரவின்  ஒளியில்  உணவு ஊட்டி மகிழ்தல்
தொலைபேசி  உரையாடி  தொலையும் நேரங்கள்
தனிமை  கூட காதல் கூடும்  காதல் கலையறி

காதல் இருத்தல்  என்பது நிலை
காதலாய் வாழ்தல்  என்பது கலை
காதலின் விருப்பம்  அறி அனுபவம் ஊட்டு

காதலுடன் ஆயுள் தீரும் வரை காதல் தீராது  

By Prasanth satkunanathan

Tuesday 8 January 2019

வரம்


ஓராயிரம் உயிர்கள் புவியில்  உண்டாயினும்
அறிவும் ஆயுளும் அதிகம் பெற்று
புவித்தாய்  வயிற்றில் கருவுற்ற உயிர்
புன்னகைத்து  உரையாட வரம் பெற்ற மனிதன்

கண்கண்ட முதல் தெய்வமாய் அம்மா அப்பா
உதிரம்  பகிர்ந்த  உடன் பிறந்த  பாச -உறவுகள்
உதிரம் பகிராமலே உயிருக்கு மேலான உறவுகள்
தனிமை நீங்க தலைமுறை வாழ வரம் பெற்ற மனிதன்

ஆனந்த உணர்வாக புன்னகையும் சிரிப்பும்
அதி சந்தோச துக்க  உணர்வாக கண்ணீர்
புரியாத உணர்வை புரிய உணர்வு -மொழியானது
உள் உணர்வை பகிர உரையாட வரம் பெற்ற மனிதன்

நொடிக்கு நொடி மாறும் சூழலும் தேவைகளும்
தினம்  தினம்  பல நூறு  அனுபவங்கள் பரிசாக
கடவுள் உண்டு  இல்லை. நீதி முதல் அநீதி வரை
ஆளுக்கால் மாறும் அனுபவங்கள் மனிதன் பெற்ற வரம்

இயற்க்கை எனும் வீட்டில் குறைவற்ற செல்வம்
அடிப்படை தேவைகளுக்கு  மேலான வளம் அதிகம்
அழகிய  பூமி தாண்டி சொர்க்கம்  தேவை இல்லை
 நிறைவான பூமியும் நிறைந்த கொண்டாட்டங்களும்

மனிதன் கேட்காமலே கிடைத்த விலையற்ற வரங்கள்

By Prasanth Satkunanathan