Tuesday 26 February 2019

அழகு



அழகு

விழிகள் வாங்கிய வரம் அழகின் தரிசனம்
உலகில் விழியேற்கும் அத்தனை அழகும் அதிசயம் தான்
அழகு தரும் இன்பம் மேனி எங்கும் தேனாக இனிக்கும்
அழகு அது ஆனந்த நிலை அனுபவிப்பவன் மனிதனுள் கலைஞன்

அணைப்பின் அழகில் அநாதையும் உணரும் தாய்மை
கைகொடுக்கும் கருணையழகில் கடவுள் உன் முன் தோன்றும்
அன்பின் அழகில் வாழ்க்கை வரமாகத் தோன்றும்
விழியால் பார்ப்பது  அழகு விழியற்றோர் பார்க்கும் அழகு பேரழகு

கடலருவி மழையென நீரின் அழகு நீங்கா மன ஈரம்
விலங்குகள் பறவைகளின் அழகு விலங்கிடா சுதந்திர உணர்வு
இருள் பகலின் அழகு இன்ப துன்ப வாழ்க்கைப்பாடம்
இயற்கையின் அழகை அனுபவித்தால் மனிதனில் அழுக்கு விலகும்

மழழை அழகு மனமெங்கும் பாசமழை
குழந்தை அழகில் துளிர்க்கும் மனிதம் கருகுவதில்லை
கண் சமிட்டி சிரிக்கும் பிள்ளை நிலா பேரழகு
குழந்தையின் ஒவ்வொரு அசைவும் கோடி அழகு

இளமை கால அழகு பூமியே சொர்க்கமாய் தோன்றும்
பெண்ணின் அழகில் காதலும் கவிஞரும் கருவாகும்
ஆணின் அழகு வீரமாய் வீட்டோடு நாட்டையும் காக்கும்
இளமை காலம் அழகை ஆழப் பிறந்த காலம்

கண்களுக்கு விருந்தாகும் அழகு நல்லெண்ணங்களுக்கு வித்தாகும்
அதிசயமாக  பார்ப்பது மட்டுமல்ல அன்பால் உணர்வதும் ஆனந்த பேரழகு
அனைத்திலும் அழகைப்பார்ப்பவர் அன்பின் மொழிமாற்றம் அழகென்பார்

அழகை பார்த்து தரம் பிரிக்காது அனைத்திலும் அழகைப்பார்த்து தரம் உயர்வோம்.

By - Prasanth Satkunanathan

Tuesday 12 February 2019

பால்யகாலம்

பால்யகாலம்


சிறகுகள்-  முளைக்காமல் - சிறகு விரியும்
நொடிக்கு- நொடி -கற்றல்கள் -நிகழும்
கவலைகள்- அற்ற -ஆனந்த காலம்
நினைவில்- நீங்கா வசந்தம்?? பால்யகாலம்

பள்ளிக்கு செல்வது  சற்றே- கசந்தாலும்
பால்ய சிநேகம் -பகிர்ந்த நேரம் -கல்கண்டு
குறும்புகளும் குதூகலமும் - விரும்பும் வம்பு - அதில்
ஆளுமையும் அறிவும் அடையாளம் காணப்படும்

கள்ள மாங்காயும் கள்ளக் கையெழுத்தும்
சிறு பொய்களும் சிறு தண்டனைகளும்
அடிபடுவதும் அணைத்துக் கொள்வதுமாய்
களவும் கற்று மறக்க சொன்ன காலம்

மான்  போல துள்ளி குதித்தது -மகிழும் நட்பு
நட்புடன் கோவம் எனின் தொட்டால் ஊதுவதும்
நட்புடன் நேசமாக விரல்களை அழுத்தி  அன்புமாய்
உடையாத சிநேகம் உயிர் பெற்ற காலம்

மழை நீரில் கப்பல் விடுவதும் நனைவதும்
மண்ணில் வீடுகட்டி உறங்கி மகிழ்வதும்
மீன் தொட்டி , கூட்டில் பறவைகள் சின்ன சின்ன  ஆசைகளாய்
பால்யகால இயற்கையோடான வாழ்வு நோயற்ற வாழ்வு

பால்யகால விளையாட்டுக்கள் விருந்து
கிட்டிப்புல், பம்பரம், பட்டம், அடிச்சுத்தட்டு
கெந்தித் தட்டு, கிளித்தட்டு, போளை அடித்தல் , கண்ணாம்பூச்சி
விளையாட்டுக்கள் ஏராளம் சந்தோசம் தாராளம்

பால்யகால சிநேகம் நண்பர்கள் பிரிந்தாலும் நட்பு பிரியாது
பால்யகால கற்றல்கள் பல்கலைக்கழக அத்திவாரம்
பால்யகாலம் கவலைகளற்ற சந்தோச வரம்

கடந்தாலும் மீண்டும் திரும்ப ஏங்கும் பால்யகாலம்

By - PRASANTH SATKUNANATHAN