அம்மா!
ஜனனம் முதல் நான் நீ அனைவரும்
அதிகளவில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை அம்மா!
நான் அழ நீ சிரித்த ஒரே நாள்
நாம் இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடிகள் மட்டுமே அம்மா!
உயிர் போகும் வலியில் கூட உயிர் தந்து
நாம் உயிர் போகும் வலி கொடுத்தாலும் உயிராய் நேசிப்பது அம்மா!
எம்மை எல்லாம் படைத்தது, காத்து
கெட்டதை அழித்து அந்த இறைவனுக்கும் இறைவன் அம்மா!
தாயின் மடியில் தொலைத்த தூக்கம்
தாயின் சேலையில் கலையாத நிம்மதி
சேய் அறிய முடியா தாய் மறந்த தூக்கம்
அழிக்க முடியாத அன்பின் அடையாளம்
அன்புக்கு பொறுமைக்கு உண்மைக்கு
அனைத்து நல்ல வார்த்தைகளின் ஒரே உதாரணம் அம்மா!
உண்மையான நேச பரிமாற்றம்
வேஷம் அற்று வெளிபடையாக பெறுவது நாம் - தருவது அம்மா!
ஆயிரம் மாற்றங்கள் வந்தும் மாறாதது
காலத்தால் மாற்ற முடியாத மாற்றங்கள் இல்லாதவள் அம்மா!
பெத்தவள் அணைப்பில்
மரணம் வந்தாலும்
மறு பரீசிலனை பண்ணும்
மண்டி இட்டு
புன்னகை செய்து
பிரிக்காது பிரியாவிடை பெறும்
இறைவனின் வரமாகவும் இயற்கையின் கொடையாகவும்
எம்மை காத்து நிற்கின்ற கண் கண்ட தெய்வம் அம்மா!
நாம் எல்லோரும் இணைகின்ற
ஒரே கலாச்சராம் கருவறை தாங்கிய கோவில் அது தான் அம்மா!
By Prasanth Satkunanathan