Monday, 10 June 2013

எல்லோருக்கும் உன்னை பிடிக்க முடியாது -அது 
இரவிலும் சூரியனை காண ஏங்குவது போல் 
பிறர் உன்னை விரும்புகிறார் என நினைத்து ஏமாறுவது 
மழை முகில் கூடும் போதெல்லாம் மழை வராதது போல் 

Thursday, 6 June 2013

என் காதல் 
இறந்து பின்தான் என் காதல் புரியும் என்றால் 
இதயத்தை கல்லாக்கி கல்லறை செல்வேன் 
காதல் சண்டையில் இரு இதயங்கள் சாகமால் 
என் காதல் உன்னில் பிறக்க நான் இறப்பேன்

Wednesday, 5 June 2013

ஒரு நாள் மலர்ந்து ஒரு நாள் மடியும் மலரே
அது தான் கொண்டாட படுவதை தான் விரும்பும் 
பறித்தாலும் பறிக்கா விட்டாலும் ஒரு நாள் வாழ்க்கை 
மலர் மடிய போகிறோமே என ஏங்கி காத்திருப்பதில்லை 
மனிதனாய் பிறந்த நாமும் இருக்கும் வரை வாழணும் 
நொடிக்கு நொடி இறக்கதே என்றோ வரும் நாளிற்காய் 

Tuesday, 4 June 2013

தரைக்கும் அலைக்குமான ஒரு சில நொடி பிரிவில் 
ஊடலின் மவுனம் உன் உள்ளத்தை தாக்குவது  போல் 
கரையை அலை முத்தமிடும் அந்த  காதல் நிமிடங்கள் 
கூடலின் இன்பம் உனக்கு காதலை கற்பிக்கும் தருணம் 


Monday, 3 June 2013

மருத்தவம் வளர்ந்து வாழும் காலம் உயர்ந்தது 
மனதை கட்டுபடுத்த  மட்டும் மருந்து இல்லை 
உறுப்புக்கள்  ஒன்றே அதில் ஓடும் குருதி ஒன்றே 
மன நிலை மட்டும் மனிதனுக்கு மனிதன் வேறு 
இறை வழி ஒன்றில் தான் மனங்கள் ஒரு வலி செல்லும் 
மனிதின் கட்டுபாடு படைத்தவன் கையில் மருந்தில் அல்ல 
மருத்தவம் கடவுள் அவதாரம் எடுக்க முயன்று தோற்கின்ற இடம்

Wednesday, 22 May 2013


உன் சிரிப்பில் சீர்குழைந்து போவது  மனம் 
அறிவு  தடுத்தாலும் இதயம் வழி விடுகிறது 


நீ ரசிக்கும் அழகை நான் ரசிப்பது ஒரு சுகம் 
உன் அருகில் இருக்கும் போதும் மட்டுமே 


அம்மாவின் தாலாட்டில் கண் மலர்ந்தேன் 
ஊஞ்சல் ஆட்டத்தில் மனம் மகிழ்கிறேன்