Tuesday, 30 April 2013

இயற்கை தெய்வம்



உங்கள் அம்மா உங்களிற்கு குடை தரவில்லையா 
என்று அனுதாபமாய் நான் உங்களை பார்க்கிறேன் 
கோழி குஞ்சுகள் சொன்னது பரிதாவம் கொல்லாதே
மழையில் நீராடுகிறோம் இயற்கை விரோதியல்ல 
எங்களுக்கு இயற்கை தெய்வம் உங்களுக்கு எடுபிடி
நாங்கள் இயற்கையை மதித்து ஒன்றி வாழ்கிறோம் 
நீங்கள் இயற்கையை மிதித்து மீறி வாழ்கிறீர்கள்  
மழையில் நனைந்தால்மருத்துவ செலவு உங்களுக்கு 
பரிதாபம் உங்கள் மீது தான் பார்த்து வீடு போ என்றன 

Monday, 29 April 2013

இல்லறம் நல்லறமாக


இல்லறம் நல்லறமாக 
இரு வெவ்வேறு மனிதர்கள் வித்தியாசமே 
வித்தியாசங்கள் இருக்கும் என்பதை புரிதல்
வேறுபாடுகளை விரும்பி வாழ்வதே காதல் 
இது தான் இனிய மண வாழ்வின் இரகசியம் 

Sunday, 28 April 2013

அநீதிக்கு நீதி

அநீதிக்கு நீதி 
கூண்டில் அடைபட்ட கிளி  வெளியே வந்தும் பறப்பதில்லை
இறக்கை இருப்பதையே மறந்து விட்டு  யோசியம் சொல்கிறது 
சமூதாயக் கூட்டில் அடைபட்ட விதவை பெண் மன நிலை கூட 
இளமை கனவுகள் இருந்தும் உணர்வுகள் சாகடித்து நீதி செய்கிறாள்

Saturday, 27 April 2013

நிகரற்ற அனுபவங்கள்



பெற்றவளுக்கு முதல் குழந்தை காணும் நொடிகள் 
இதயங்கள் இணைந்து துடித்த முதல் காதல் நிமிடங்கள் 
பள்ளி பருவ முதல் நண்பர்கள் நகர மறுக்கின்ற நாட்கள் 
இந்த தருணங்கள் வாழ்கையில் ஒரு முறை மட்டுமே 

Friday, 26 April 2013

வெறுத்தும் நிலைத்தவன் ..!!


வெறுத்தும் நிலைத்தவன் ..!!
இரவுகள் அழகாய்  விழிகள் உறங்காதவரை 
கனவுகள் தொடர்வது கண்கள் திறக்காதவரை 
ஒன்றில்லாமல் ஒன்றில்லை இருந்தும் நான் 
உன் நினைவில் நீ நேசித்தாலும் வெறுத்தாலும்




Thursday, 25 April 2013

மாற்றம்...!!



மனிதனின் மனது மழை நீர் போல 
கலங்க மற்ற கடவுளின் வரமாய் 
இயல்பாய் இயற்கையாய் இருந்தது 
மனித நவீன நாகரிகத்துள் விழுந்து 
இரண்டுமே விஷமாய் மாறும் வரை 

Wednesday, 24 April 2013

நினைத்திருக்கும் வரை



ஆலய மணி ஓசை காற்றில் கலந்து 
தெய்வீக ராகமாய் செவிகளில் விழுந்தது 
சேவலின் கூவலும் குயிலின் பாடலும் 
பறவைகளின் சத்தம் இரை தேட ஆயுத்தம் 
இறுதியாய் இருளை பிரிய மனம் இல்லமால் 
இருள் விலகி ஒளி இமைகள் தானாய் திறந்தன
நீண்ட நீலத் திரையை விலத்திக்கொண்டு 
சூரியன் சுறு சுறுப்பாய் வருவது தெரிகிறது
இனி இந்த ரம்மியமான இனிய  காலை  காட்ச்சி 
தாய் மண் பிரிந்தவற்கு நினைத்திருக்கும் வரை