Tuesday, 29 April 2014

வேஷம்

ஒருவருக்கு 
எதனால் சந்தோசம் 
என அறிந்தும் 
அதை உன்னால் செய்ய முடிந்தும் 
கண்டும் காணாததும் போல 
விலகி நடந்தால் 
ஒன்றில்  நீ தனியே நடக்கிறாய் 
அல்லது 
உன் கூட நடப்பவர்கள் 
உன்னை போல 
விஷம் உள்ள வேஷக்காரர்கள் 
இனம் இனத்துடன் சேரும் 

By HeartBeat-Santh

Sunday, 27 April 2014

இசை

இசை 
இல்லமால் இருந்து இருந்தால் 
இருதயம் கூட துடிக்க 
வாய்ப்பு இல்லை 
ஏனெனில் 
இதயம் துடிப்பதும் 
ஒரு ஓசையில் தானே 

By HeartBeat-Santh


அம்மா


நாம் யாருக்கும் 
சுமையாக இருந்ததில்லை 
வேதனை கொடுத்தது இல்லை 
என்று சொன்னால் அது பொய் 
சுமையை கூட 
சுகமாய் சுமக்க முடியும் என்றால் 
கடவுளை கேட்டாலும் விடை 
அது அம்மா 

By heartbeat-Santh

Saturday, 26 April 2014

காதல்

குருதியால் இணையாது 
உறுதியால் இணைந்து உறவு 
இன்னும் சொன்னால் 
உறவுகள் தோன்றுவதற்கே 
இறைவன் தனக்கு பிடித்த ஒன்றை 
முதலில் பூமிக்கு அளித்த பரிசு 
இயல்பான இயற்கையான 
ஒரு உணர்வு காதல் 

By HeartBeat-santh


Friday, 25 April 2014

மழைக்காலம் 
நீண்ட பயணம் 
தெருவின் இரு பக்கமும் 
பெரும் மரங்கள் 
தெருவிற்கு கூரை அமைத்தது போல் 
ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல்
பச்சை இலை மேல் உள்ள மழைத்துளி 
பார்க்கும் போது ஏற்றப்படும் உணர்வு 
விபரிக்க முடியாத பெயரிடப்பதா 
புதிய உணர்வு 
வானொலியில் 
இளையராஜாவின்  காதல் பாடல்கள் 
ஆகா 
என்ன ஒரு இனிய பிரயாணம் 
முடிக்க விரும்பாத பயணம் 
என்றென்றும் நெஞ்சில் பசுமையாக 


நிகழ்காலம்

சில்லென்ற காற்று 
சிந்தனைக்குள் சிக்கல் இல்லை 
அருகில் இல்லாவிட்டாலும் 
அன்னையின் சேலை வாசம் 
கவலை இன்றிய தூக்கம் 
கடந்த காலம் பற்றி கவலையும் இல்லை 
எதிர்காலத்தை பற்றி கலங்கவும் இல்லை 
நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன் 

By heartbeat-Santh

யார் குற்றம்

எனை 
சிறைபிடிக்கும் உன் கண்கள் 
பயித்தியமாக்கும் உன் சிரிப்பு 
சூடேற்றும் உன் மூச்சு காற்று 
குளிர் ஊட்டும் உன் குணங்கள் 
உன் உணர்வுகளால்
என் உணர்வுகளை கொலைசெய்து 
உன் உடலால் 
எனக்கு தீ மூட்டுகிறாய் 
நீறானாலும் நீங்காது 
உன் நினைவுகள் 

By heartbeat-Santh