Tuesday, 26 June 2018

#சேலை


#சேலை


தமிழ் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாய் தமிழ் மான காப்பாய் தாய் நாட்டின் உயர்வாய் பல வண்ண சேலைகள் நடமாடும் வானவில்லாய் சேலைகள் பூமி எங்கும் புன்னகைக்கும் கோலங்களாய் சேலை அணியும் பெண்கள் யாவருமே மெய்யாகவே விழி வியக்கும் உலக அழகு சேலையின் மதிப்பு விலை அடைப்படையில் மாறலாம் விலை மதிப்பற்ற அழகு என்பது சேலையில் பெண்கள் பெண் தெய்வங்கள் சேலையில் தரும் உணர்வு தாய்மை பெண்கள் சேலையில் வந்தால் லக்ஷ்மி கடாட்ஷம் சேலையில் பெண் தெய்வங்கள் தெய்வீக பேரழகு சேலை கட்டிய பெண்களில் தெய்வம் தெரிவது பெண் பாதுகாப்பு அம்மாவின் சேலை சுக உறக்கம் தந்த ஆனந்த தொட்டில் அம்மாவின் சேலையில் சுவாசமும் வாசமும் அன்பின் எல்லை அம்மாவின் சேலையில் பயமற்ற பாதுகாப்பு வாழ்வு அம்மாவின் சேலை அரவணைப்பு ஆயுட்கால நிகரற்ற ஆனந்தம் பெண் அழகிற்கு பெருமை சேர்த்து பெண் மானத்திற்கு காவல் காத்து உலகெங்கும் தமிழ் அடையாளமாய் வலம் வரும் சேலையின் வரமும் வாழ்வும் பெண்கள் பெற்ற கொடை



By - Prasanth Satkunanathan


Tuesday, 12 June 2018

#கவிதை

#கவிதை 

காதலித்துப்  பார் கவிதை வரும் 
இயற்கையை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
இசையை  கேட்டுப்  பார் கவிதை வரும் 
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்

உலகத்தை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
உலகத்தை வெறுத்துப்  பார் கவிதை வரும்
தோல்வி கண்டு பார் கவிதை வரும்
வெற்றி கண்டு  பார் கவிதை வரும்

கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இளமையை  ரசித்துப்  பார் கவிதை வரும்
முதுமையை மதித்துப்  பார் கவிதை வரும்

உண்மையை  உணர்ந்து பார் கவிதை வரும்
பொய்மையை  விரட்டி பார் கவிதை வரும்
உறவுகளை விரும்பி பார் கவிதை வரும்
உறவுகளை இழந்த பின் பார் கவிதை வரும் 

நீதியாய் நடந்து பார் கவிதை வரும்
அநீதியை கடந்து பார் கவிதை வரும்
நீ கவிதையை ரசித்துப்  பார் கவிதை வரும்

உள் உணர்வுகள் சொற்களாய் மொழி மாறும் 
விழி வழி கண்டவை இனி சொல் வழி காண்பாய்
இதயத்துடிப்பினை இனி எழுத்தினில் உணர்வாய் 
உணர்வும் மொழியும் இணைய கருவாகவும் கவிதை


காட்சிகள் மீது கண்கள் கொண்ட காதல் கவிதை 
இயற்கையை ரசிக்கும் இதயத்தில் உதயம் கவிதை 
விழிகளில் அழகானவை மொழிகளில் பேரழகாகும் 
உருவங்கள் மறைந்தாலும் எழுத்தினில் உயிர்வாழும்


கண்களில் விழுந்து எண்ணங்களில்  மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் எண்ணங்களிற்கு  வழி விடு
உன்னில் இருந்தும்  தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

By Prasanth Satkunanathan (HeartBeat)

Tuesday, 29 May 2018

காதல் கண்ணன் !!!


காதல் கண்ணன் !!!

ஆயர் பாடியில் பிறந்தவன்
கோகுலத்தில் குடி புகுந்தவன்
இளமை ஆட்கொண்ட இடையன்
இதயம் கவர்ந்த  காதல் கண்ணன்

வண்ணங்கள் ஏங்கும் உன் கரு மேனி
அழகின் இலக்கணத்தை மாற்றிய மாய மேனி
மழை தரா கரு நீல தேகம் உனது
மனதிற்குள் காதல் மழை தந்த மாயன்

மாலையாய் உன் தோள்  சேர மலர்கள் தவம்
மயில் இறகை நீ சூடியதோ மயில் பெற்ற வரம்
உனை அலங்கரித்த யாவுமே அழகுப் பொருளானது
உனை வர்ணித்த வார்த்தைகள் அழகின் அர்த்தமானது

இயற்கையைத்  தாலாட்டும் புல்லாங்குழல் ஓசை
இனிமைக்கு பொருள் சேர்க்கும் இன்னிசை
உன் மூச்சு காற்று கலந்து வரும் ஜீவ இசையில்
இதயத்தில் கருவாகும் ஆத்மீக காதல்

கண்களால் வர்ணிக்க கண்கள் காணாது 
மொழிகளால் சொல்வதற்கு மூச்சு போதாது
அழகால் காதல் ஆட்சி செய்யும் கண்ணா
அன்பால் எனை ஆழும்  நாள் எப்போது மாயவா

By Prasanth Satkunanathan (Heart Beat )

Thursday, 17 May 2018

May18 முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!



அடிமையாக இருந்திருந்தால் கூட
அனாதையாக இறந்திரோம்! 

அகிலமே பார்க்கச்  சிதைந்து விழுந்தோம்

 நிர்வாணப்  பிணங்களாக! 

இணையோம்! பிரிவோம்! 

என்றால் பிணங்களே தொடர் புள்ளி...  

இறந்தவர் பேசுகிறோம் 
எங்களை மதிப்பின் இணைந்து வாருங்கள்!

எங்களை வைத்து அரசியலும் ஆதாயமும் தேடுபவர்கள் 

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு நாள் பார்ப்பவர்களே!  

எங்களை மறவாது நினைத்து நேசிப்பவரே 

உங்களோடு இருப்பவரை மதித்து அணைத்து வாழுங்கள்! 

இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!  


By Prasanth Satkunanathan.

Tuesday, 15 May 2018

விடியல்


விடியல்


கோயில் மணி  அலாரத்திலும்
கொண்டைச்  சேவல் அக்கறையிலும்
விழிகள் திறந்து கொள்ள
விடியல் அழகாய் வர வேற்கிறது

இணைந்தும் தனித்துமாய் பறவைகள்
ஏழிசையில் புது மெட்டு எடுத்து
சுரம் சேர்த்து  சுகம்  தரும் நேரம்
இயற்கை வழங்கும் இலவசக்  கச்சேரி

மெல்ல மெல்ல நேரம் நகர
இருளை உறங்க வைத்து விட்டு
இயற்க்கைக்கு உயிர் தந்து காக்க
கிழக்கில் கதிரவன் கண் விழித்தான்

சூரியக்  கதிர்  கை  நீட்டி
அன்பாய் அழைத்தது வெளியே வா என
உறக்கத்திடம் இருந்து பிரியா விடை பெற்று
வெளியே வந்தால் விடியலின் அழகு வியப்பு

காலைக்  கதிர் கண்களோடு கூடல்
பூக்களின் ஜனனம் புன்னகை
உயிர்களின் தேடல் உற்சாகம்
மெல்லிய காற்று சுக சுவாசம்

இயற்க்கைக்கு உயிர் தந்த விடியல்
கண்களுக்கு விருந்து தந்த விடியல்
உற்சாகம் தன்னம்பிக்கை தந்த விடியல்
இறைவன் எழுதிய அழகிய கவிதை விடியல்

By Prasanth Satkunanathan ( Heartbeat)

Tuesday, 1 May 2018

தெய்வக் குழந்தைகள் இன்பவரம்



தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்

அழுது கொண்டே கண் விழித்தாலும்
மண் வந்த மழலை ஆனந்த வரம்
கைகைளில் தாங்கிய முதல் அனுபவம்
கண்களில் நீர்த்துளி இதழ்களில் புன்னகை

நீண்ட துயில் கொள்ளும் மழலை மாயம்
முகத்தில் நொடிக்கு நொடி மாறும் பாவங்கள்
அழுவதும் சிரிப்பதுமாய் மாறும் ஆனந்த ஆச்சரியங்கள் 
விழி திறந்து பார்க்கக்  காத்திருக்கும் விழி மூடாப்   பெற்றவர்

குழந்தை கண் சிமிட்டும் நொடிகள்
பகல் நேர நட்சத்திரங்களின் தரிசனம்
காந்த விசை தோற்கும் கண்களின் ஈர்ப்பு
நகராது விலகாது நாமெல்லாம் ரசிகராய்

மழலையின் சிரிப்பைக்  கண்டு மறையாத வானவில்
கபடமற்ற சிரிப்பில் கரைந்து போகும் கவலைகள்
யாராலும் வெறுக்க முடியாத விரும்ப்படும்
குழந்தையின் சிரிப்பே பூமியில்  நிஜ அழகு

மழலையின்  குறும்பைக்  கண்டு கோபம் கூட கொஞ்சும்
மண்ணை உண்ட கண்ணனனின் தரிசன அனுபவம்
உணவு நேரப்  போர்க்களம் அழகான ராட்ஷகர்கள் 
வெண்ணை உண்ட கண்ணனாய் கொள்ளை அழகு

அம்மா அப்பா என அடையாளம் தந்து
வாழ்க்கைக்கு அர்த்தமும் சந்தோசமும்  தந்து
அம்மா அப்பா என்று அழைக்கும் நேரம்
ஆனந்த எல்லை வரை கூட்டிச்  செல்லும்
இதை விட இன்பம் ஏது எனப்  பூரிக்க வைக்கும்
தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்


By Prasanth Satkunanathan - Heartbeat

Tuesday, 17 April 2018

காரணம்



காரணம்

வாழப்  பிறந்த நாம்
வாழ்ந்து முடிப்பதற்குள்
செத்து செத்துப் பிழைக்க காரணம்
ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவற்ற செயல்களே

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
இடம் பெறும் தீமைகளின்
அடிப்படைக் காரணம்
இயற்கையுமில்லை இறைவனுமில்லை , மனிதனே!

நாம் மனிதர் என்று ஏற்காது
மனிதனில் புனிதானாய் அறிஞ்னாய்
அடையாளப் படுத்திய காரணம்
மனித ஏற்ற தாழ்வுகளின் ஆரம்பம்

சுய லாப நோக்கங்களிற்க்காக 
மனித உணர்வுகளை வியாபாரமாக்கி
பணம் கண்ட காரணம்
கற்பும் காசென்றால் விலை போனது

இறை வழி பாடும் நம்பிக்கையும்
மனிதனை நல் வழி படுத்தவே
பக்தியை மிஞ்சிய ஒரு பயமே காரணம்
இல்லை எனில் உடன்  இறக்கும் மனிதம்


மனித உணர்வுகளில் வேறு பாடில்லை
மனித ஆசையிலும் அறிவிலுமே
உணர்வுகள் ஆசைகளை அடக்காத காரணம்
மனிதன் சக மனிதனை மதிக்காது எதிரியானான்
மனித ஒழுக்க நற் பண்புகளை
சட்டங்கள் ஆயுதங்களால் நெறி படுத்த முடியாது
சட்டங்கள் மீற சட்டங்கள் காரணம்
போர்கள் தொடர ஆயுதங்கள் காரணம்

புரியாமல் விமர்சிக்காதீர்கள்
அறியாமல் ஆத்திரப்படாதீர்கள்
அன்பு செய்யக் காரணம் தேவை இல்லை
நட்பாய் இருக்க தகுதி தேவை இல்லை

என்நிலை வந்தாலும் மனிதனாய் இருக்கங்கள்
யாராக  இருந்தாலும் மனதாரப் பழகுங்கள்
தீமை யார் செய்தாலும் காரணம் நீயும் ஆவாய்
மனிதனாய் நீயும் இரு பிறரையும் இருக்க விடு

By Prasanth satkunanathan ( HeartBeat)