தாலாட்டை தாய் பாடுவதற்கும்
பிறர் பாடுவதற்கும்
உள்ள வித்தியாசமே
இசைஞானியின் இசை
முதல் காதல் அனுபவம்
தொடரும் இனிய தோழமை
அன்னை மடியில் உறங்கும் சுகம்
மழையில் நனையும் சுகம்
சுகமான அனுபவங்களின்
ஒட்டுமொத்த இசை வடிவம்
இசைஞானியின் இசை
தனிமைக்கு துணை வருவது
இருட்டிற்கு வெளிச்சம் தருவது
துன்பத்தை மறக்கடிப்பது
இதயத்தை துடிக்க வைப்பது
இயற்கையான இசையை
அறிவு கொண்டு ஆராயமால்
அனுபவம் தந்து ரசிக்க வைப்பது
இசைஞானியின் இசை
காற்றும் காதலும் உள்ளவரை
இசைஞானியின் இசை இருக்கும்
இசைஞானி இளையராஜா
உடல் நல ஆரோக்கியத்துடன்
நல் இசை தரும் அவரது பணியை தொடர
நாங்கள் அனைவரும் சேர்ந்து
அவரது இனிய பிறந்தநாளில்
வாழ்த்துவோம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசைஞானி இளையராஜா
By HeartBeat-Santh

No comments:
Post a Comment