Saturday, 24 May 2014

மனிதனுக்கும்
காவல் காக்கும் வெருளிக்கும் 
வித்தியாசம் இல்லை 
என் சொல்லாமல் சொல்லி 
பயந்து  பறக்கின்றன
இரை தேட வந்த 
பறவை கூட்டம் 

By HeartBeat-Santh

Thursday, 22 May 2014

முற்று புள்ளி

மழையில் நனைந்தால் 
மரங்கள் துளிர்கின்றன 
மலர்கள் சிரிக்கின்றன 
மனிதன் மட்டும் தான் 
மரண பயத்தில்
குடை பிடிக்கிறான் 
ஆனந்தத்தின் 
முற்று புள்ளி 
அறிவு 

By HeartBeat-Santh


Wednesday, 21 May 2014

தியாகி

மனதாலும் உடலாலும் 
பத்து மாதம் நொந்து 
பெற்ற தாய் தெய்வம் என்றால் 
தாயையும் சேயையும் சேர்த்து 
மரணம் வரை சுமக்கின்ற 
தந்தை அன்புக்குள் அடங்காத விந்தை 
வாழ்ந்து முடிந்த பின் 
கிடைக்கும் தியாகி பட்டம் 

By Heartbeat-Santh



Saturday, 17 May 2014

நீதிக்கா நிதிக்கா

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனவரே 
முழு உலகும் நடிக்க உயிர் துடித்து இறந்தவரே 
முழுதாய் மனிதாபிமானம் செத்துவிட வில்லை 
ஒரு நாளாவது ஓராயிரம் பேர்களை நினைக்கின்றோம் 
அது கூட உங்கள் இறப்புக்கு நீதி கிடைக்க அல்ல நிதி திரட்டவே  
உங்களை கொண்டவன் ஒரு இனம் மட்டும் அல்ல 
இன வெறி பிடித்த வாழும் ஆடும் பிணங்கள் 
நீதியை கொன்றவினிடம் நீதி கிடைக்க வாய்ப்பில்லை 
இருந்தும் தொடர்கிறது உணர்வெழுச்சி 
பழிவாங்கவா இல்லை பாவ மன்னிப்பு கேட்கவா 

By HeartBeat-Santh

பரீட்சை

தேய்கின்ற நிலவை 
நிறுத்த முடியாது
முழுமதியானதும் 
சிறைபிடிக்கவும் இயலாது 
வாழ்க்கையில் வரும் 
துன்பத்தை  துரத்தவும் முடியாது 
இன்பத்தை நிறுத்தவும் இயலாது 
துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல 
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே 
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்  

By HeartBeat-Santh

Friday, 16 May 2014

அனுபவம் அறிவு

அறிவு தரும் சுகம்  
பகலில் நித்திரை கொள்வது போல 
உண்ட பின் வரும் மயக்கம் போல 
உதவாமலே உறங்கும் 

அனுபவம் தரும் சுகம் 
இரவில் வரும் நிலா தரும் கவிதை போல 
குடைக்குள் ஒதுங்காது மழையில் நனையும் சுகம் 
அனுபவம் வாழ்க்கை.. கடவுள் தந்தது 
அறிவு அழிவு.. மனிதன் கண்டது

By HeartBeat-Santh


Thursday, 15 May 2014

இரவும் அழகு.. பகலும் அழகு.. 
அது பார்ப்பவர் கண்ணில் மட்டுமல்ல 
மனங்களிலும் தங்கியுள்ளது! 
வலிகளில் தான் இன்பங்கள் பிறக்கின்றன 
பிறப்பு கூட ஒரு உதாரணம்! 
இன்பமே வாழ்வாயின் 
தாகத்தின் பின் அருந்தும் 
நீரின் இன்பத்தை உணர முடியாது!
இன்பத்தின் அளவுகோல் துன்பம்!!  

By HeartBeat-Santh