Tuesday 25 June 2019

தண்ணீர்


தண்ணீர்


உயிர் ஆகாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் தண்ணீரே மூலாதாரம்
பஞ்ச பூதங்களில் ஒன்றாய் உலகம் கருவாக உயர்வான காரணி
உலக சமநிலையை பேணுவதில் நிலையான இயற்கை நீதிபதி
தண்ணீர் இன்றிய தரணியில் அணுக்கள் கருவில் கலைந்திருக்கும்

புவி வாழ் உயிர்களின் தவிர்க்க முடியா ஆகாரம் தண்ணீர்
உயிர் தாகம் தொடரும் வரை நீர்த்தாகம் தொடரும்
தண்ணீர் இன்றி தாகம் என்ற பெயரே இல்லை
வறண்ட நாவிற்கு வரமான நீர் சொர்க்கலோக இன்பம்

இயற்கை எழினின் பசுமையின் பாதுகாவலன்
பூத்து குலுங்கும் பல வண்ண பூக்களின் ஆதாரம்
மழை நீரால் மண் நனைத்து நிலம் வனமானாது
இயற்கையின் இதயத்தில் ஓடும் குருதி தண்ணீர்

உலகில் நாட்டினை பிரித்து நீரல்ல பாது காப்பதே நீர்
விலை பேசாது உயிர் மதிப்பறிந்த ஒப்பற்ற பாசம்
பூமியிலும் மனித மேனியிலும் நீரின் அளவே அதிகம் 
உலகில் உயிர்கள் கருகாது காக்கும் உயிர் நாடி  

கடல் வாழ் உயிர்களின் உலகம்
மின்சார உற்பத்தியில் மூலதனம்
விவசாயத்தின் தீர்க்க தரிசி
நீரின் பயன் பாட்டின் பட்டியல் முடிவிலி
நீர் வளம் அனைத்துமே வரம்
உயிரான நீருக்கு விஷம் ஊட்டாதீர்
நீரை மாசுபடுத்தின் நீரின்றி அழிவோம்

By Prasanth Satkunanathan