நன்றி
நன்றி
எனும் மூன்றெழுத்தின் சாதனை சாதரணமல்ல - அது
சந்தோசத்தின்
தொடர்புள்ளி சண்டையின் முற்றுப்புள்ளி
நன்றி
கூறும் போது உருவாகும் அன்பின்
வெளிப்பாடு -அது
ஓடும்
குருதியில் நம்பிக்கை ஒட்டிக்கொள்ளும் உறுதி
நன்றி
என்பது வெறும் வார்த்தை அல்ல - அது
வரலாற்றையும்
வாழ்க்கையும் மாற்றும் சக்தி கொண்டது
நன்றி
அனைவரும் விருப்பும் நல் மனித ஒழுக்கம்
புராதன
காலம் முதல் நவீனம் வரை மாறாத மனித கலாச்சாரம்
உறவுக்குள்
நன்றி ஏன் என்பதெல்லாம் ஊடல்
கோபம்
உறவுக்குள்ளும்
சொல்லும் நன்றி உடையாத வாழ்தல்
நன்றி
என்பது முடியும் வழி அல்ல நல்
வழிகளின் ஆரம்பம்
எதிர்
பாரா நன்றியும்
சொன்ன பின் உன்னை அணைக்கும்
அறிஞர்கள் படைப்புகளும் ஆண்டவனின்
அவதாரங்களும் - அதில்
படித்தும்
அறியலாம் நன்றியின் பெருமையும்
பயன்களும்
நன்றி
என்பது சில சமயம் செயல்களாக
வெளிப்படும் - அது
சொல்லை
விட ஆழம் அன்பின்
பாஷை புரிந்தவர்க்கு
இயற்கைக்கு
நன்றி தாய் போல காக்கும்
பெற்றோர்க்கு
நன்றி உன் பிள்ளை உன்னை
காக்கும்
உறவுக்கு
நன்றி தனிமையை அது நீக்கும்
நட்புக்கு
நன்றி அனாதைக்கும் அன்னையாக்கும்
உதவிக்கு
நன்றி உனக்குள்ளும் சேவையை விதைக்கும்
நன்றி
நம்மை இணைக்கும் மனித கலாச்சாரம்.
நன்றி
இல்லா உள்ளம் நம்பிக்கை இல்லா உலகம்
நன்றியோடு
இருப்போம் நன்றியோடு தொடர்வோம்
By Prasanth Satkunanathan