Tuesday 6 February 2018

சந்தோசம்

சந்தோசம்

உணர்வுகள் பூக்கும்
அது உள்ளங்களில் தேன் பாய்ச்சும்
எண்ணங்கள் எங்கும் இனிமையாக
நெஞ்சமெல்லாம் சந்தோசம் நிறைந்திருக்கும்

காணும் காட்சியில் கிடைக்கும் சந்தோசம்
விழியில் ஆனந்த ஊற்றாக ,ஆனந்த கண்ணீர்
கேட்கும் ஒலியில், உணரும் சந்தோசம்
இதயத்துடிப்பில் மெட்டெடுத்து இன்னிசை படிக்கும்

பேசும் பேச்சில் பெருகும் சந்தோசம்
மொழியின் இனிமையை, உதிரத்தில் கலக்கும்
மௌனத்தின் உள்ளே, உள்ள சந்தோசம்
மனங்களின் புரிதலை இன்னும் கூட்டும்

கடவுள் தரிசனம் , ஆத்ம  சந்தோசம்
சரியான பாதையில் செல்ல ,தைரியம் ஊட்டும்
உண்ணும் உணவு தரும் ,சந்தோசம்
சுவையும் கூட்டி ,உடல் ஆரோக்கியத்தையும் கூட்டும்

சக மனிதர்கள் தரும் சந்தோசம்
ஒற்றுமையும் ,உலக சமாதானமும் தரும்
உறவுகள் தரும் ,சந்தோசம்
கொடுக்கின்ற சுகத்தை உணர்த்தும்

பூமி எங்கும் சந்தோசம்
புன்னகை கோடி தரும்
சந்தோசம் என்பது தெரிவு
சந்தோசம் தெரிவானால் ,தடை போட
ஏதும் இல்லை, யாருமில்லை!

By Prasanth Satkunanathan ( Heart Beat )

No comments:

Post a Comment