வரம்
ஓராயிரம் உயிர்கள்
புவியில் உண்டாயினும்
அறிவும் ஆயுளும்
அதிகம் பெற்று
புவித்தாய் வயிற்றில் கருவுற்ற உயிர்
புன்னகைத்து உரையாட வரம் பெற்ற மனிதன்
கண்கண்ட முதல் தெய்வமாய்
அம்மா அப்பா
உதிரம் பகிர்ந்த
உடன் பிறந்த பாச -உறவுகள்
உதிரம் பகிராமலே
உயிருக்கு மேலான உறவுகள்
தனிமை நீங்க தலைமுறை
வாழ வரம் பெற்ற மனிதன்
ஆனந்த உணர்வாக புன்னகையும்
சிரிப்பும்
அதி சந்தோச துக்க உணர்வாக கண்ணீர்
புரியாத உணர்வை
புரிய உணர்வு -மொழியானது
உள் உணர்வை பகிர
உரையாட வரம் பெற்ற மனிதன்
நொடிக்கு நொடி மாறும்
சூழலும் தேவைகளும்
தினம் தினம் பல
நூறு அனுபவங்கள் பரிசாக
கடவுள் உண்டு இல்லை. நீதி முதல் அநீதி வரை
ஆளுக்கால் மாறும்
அனுபவங்கள் மனிதன் பெற்ற வரம்
இயற்க்கை எனும்
வீட்டில் குறைவற்ற செல்வம்
அடிப்படை தேவைகளுக்கு மேலான வளம் அதிகம்
அழகிய பூமி தாண்டி சொர்க்கம் தேவை இல்லை
நிறைவான பூமியும் நிறைந்த கொண்டாட்டங்களும்
மனிதன் கேட்காமலே
கிடைத்த விலையற்ற வரங்கள்
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment