Tuesday 12 February 2019

பால்யகாலம்

பால்யகாலம்


சிறகுகள்-  முளைக்காமல் - சிறகு விரியும்
நொடிக்கு- நொடி -கற்றல்கள் -நிகழும்
கவலைகள்- அற்ற -ஆனந்த காலம்
நினைவில்- நீங்கா வசந்தம்?? பால்யகாலம்

பள்ளிக்கு செல்வது  சற்றே- கசந்தாலும்
பால்ய சிநேகம் -பகிர்ந்த நேரம் -கல்கண்டு
குறும்புகளும் குதூகலமும் - விரும்பும் வம்பு - அதில்
ஆளுமையும் அறிவும் அடையாளம் காணப்படும்

கள்ள மாங்காயும் கள்ளக் கையெழுத்தும்
சிறு பொய்களும் சிறு தண்டனைகளும்
அடிபடுவதும் அணைத்துக் கொள்வதுமாய்
களவும் கற்று மறக்க சொன்ன காலம்

மான்  போல துள்ளி குதித்தது -மகிழும் நட்பு
நட்புடன் கோவம் எனின் தொட்டால் ஊதுவதும்
நட்புடன் நேசமாக விரல்களை அழுத்தி  அன்புமாய்
உடையாத சிநேகம் உயிர் பெற்ற காலம்

மழை நீரில் கப்பல் விடுவதும் நனைவதும்
மண்ணில் வீடுகட்டி உறங்கி மகிழ்வதும்
மீன் தொட்டி , கூட்டில் பறவைகள் சின்ன சின்ன  ஆசைகளாய்
பால்யகால இயற்கையோடான வாழ்வு நோயற்ற வாழ்வு

பால்யகால விளையாட்டுக்கள் விருந்து
கிட்டிப்புல், பம்பரம், பட்டம், அடிச்சுத்தட்டு
கெந்தித் தட்டு, கிளித்தட்டு, போளை அடித்தல் , கண்ணாம்பூச்சி
விளையாட்டுக்கள் ஏராளம் சந்தோசம் தாராளம்

பால்யகால சிநேகம் நண்பர்கள் பிரிந்தாலும் நட்பு பிரியாது
பால்யகால கற்றல்கள் பல்கலைக்கழக அத்திவாரம்
பால்யகாலம் கவலைகளற்ற சந்தோச வரம்

கடந்தாலும் மீண்டும் திரும்ப ஏங்கும் பால்யகாலம்

By - PRASANTH SATKUNANATHAN

No comments:

Post a Comment