பால்யகாலம்
சிறகுகள்- முளைக்காமல் - சிறகு விரியும்
நொடிக்கு- நொடி -கற்றல்கள் -நிகழும்
கவலைகள்- அற்ற -ஆனந்த காலம்
நினைவில்- நீங்கா வசந்தம்?? பால்யகாலம்
பள்ளிக்கு செல்வது சற்றே- கசந்தாலும்
பால்ய சிநேகம் -பகிர்ந்த நேரம் -கல்கண்டு
குறும்புகளும் குதூகலமும்
- விரும்பும் வம்பு - அதில்
ஆளுமையும் அறிவும் அடையாளம் காணப்படும்
கள்ள
மாங்காயும் கள்ளக் கையெழுத்தும்
சிறு
பொய்களும் சிறு தண்டனைகளும்
அடிபடுவதும்
அணைத்துக் கொள்வதுமாய்
களவும்
கற்று மறக்க சொன்ன காலம்
மான் போல துள்ளி குதித்தது -மகிழும் நட்பு
நட்புடன்
கோவம் எனின் தொட்டால் ஊதுவதும்
நட்புடன்
நேசமாக விரல்களை அழுத்தி அன்புமாய்
உடையாத
சிநேகம் உயிர் பெற்ற காலம்
மழை
நீரில் கப்பல் விடுவதும் நனைவதும்
மண்ணில்
வீடுகட்டி உறங்கி மகிழ்வதும்
மீன்
தொட்டி , கூட்டில் பறவைகள் சின்ன சின்ன ஆசைகளாய்
பால்யகால
இயற்கையோடான வாழ்வு நோயற்ற வாழ்வு
பால்யகால
விளையாட்டுக்கள் விருந்து
கிட்டிப்புல்,
பம்பரம், பட்டம், அடிச்சுத்தட்டு
கெந்தித்
தட்டு, கிளித்தட்டு, போளை அடித்தல் , கண்ணாம்பூச்சி
விளையாட்டுக்கள்
ஏராளம் சந்தோசம் தாராளம்
பால்யகால
சிநேகம் நண்பர்கள் பிரிந்தாலும் நட்பு பிரியாது
பால்யகால
கற்றல்கள் பல்கலைக்கழக அத்திவாரம்
பால்யகாலம்
கவலைகளற்ற சந்தோச வரம்
கடந்தாலும்
மீண்டும் திரும்ப ஏங்கும் பால்யகாலம்
By - PRASANTH SATKUNANATHAN
No comments:
Post a Comment