Wednesday 23 May 2012

 போட்டி கவிதைகள்


கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும் 
 
ஊமை
உன்னை பிடித்தும் விலகும் போது 
வெறுத்தும் சேர்ந்து இருக்கும் போது
உண்மையும் உணர்வுகளும் ஊமை ஆகி
பேச முடிந்தும் மௌனம்


நிமிடமும்
வான் மழை பெய்ய முன்பும் வானவில்
பார்வைக்கு அழகாக ஒரு நிமிடம்
கண் மழை பெய்ய முன்பும் வானவில்
காதலியாக நினைவில் ஓவருநிமிடமும்


கண்
என் இதயம்
எனக்காக துடித்தாலும்
அதை நான் உணர்வது
நீ என் கண் முன்னே வரும் போது


நாணத்தில்
நொடிக்கு ஒரு தடவை
துடிக்கும் என் இமை
துடிக்க கூட மறந்தது
என்னை  பார்த்த நாணத்தில்
உன் கண் இமை துடிக்கும்
அந்த  அழகை ரசிக்க



வழி
என் கண்கள் உன் கண்களுடன் பேசியதால் தான்
என் இதயம் உன் இதயத்துடன் காதல் கொண்டது
எம் காதலுக்கு தூது விட்டது   நம் கண்கள்
நாம் இணைய வழி தந்த விழிக்கு நன்றி


நாடி
அன்பு காட்ட மட்டும் எனக்கு தெரியவில்லை
அனால் உன் அன்பு கிடைக்காமல் துடித்தேன்
துடித்தேன்  துடித்தேன்  என் நாடி துடிப்பு நிற்கும் வரை
நீ துடித்து என்னை நாடி வந்து புரிந்து கொண்டாய்
ஒரு உயிருக்காக இன்னோர் உயிர் துடிப்பது தான் அன்பு என்று


பரிசு
என் முன்பே நீ கண் மூடி போனதால்
உன் பின்பே  கல்லறை வர நினைத்தேன்
அதன் முன்பே என் கருவறை நீ வந்தாய்
அதுதான் அன்பே   நீ தந்த கடைசி காதல் பரிசு

இமைகள்
எதிரில் இருந்தும் தூரத்தில் தெரிந்த நீ
இமைகள் மூடும் போது நெருக்கமாகுறாய்
எதிரில் இருந்தும்  பிரிந்து இருப்பதாய் விட
இமைகள் மூடி இணைந்து இருப்பதே சுகம்

No comments:

Post a Comment