Saturday 17 March 2012

 போட்டி கவிதைகள்

கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும்


நம்பிக்கை
உன் மீது பிறர் நம்பிக்கை மாறலாம்
பிறர் மீது உன் நம்பிக்கை விலகலாம்
உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையேல்
நீ நீயாகவே வாழாமலே வாழ்க்கை முடியலாம்


இதயம்
கண்கள் சந்தித்து இதயம் காதல் கரு கொண்டது
உணர்வு
கள் கலந்து இதயம் காதலை வளர்த்தது
சந்தேக அலை அடித்து இதயம் வலி கண்டது
இறுதியில் இதயங்கள் உடைந்து கல்லறை முடிவானது
இதயம் இது  காதலின் பிறப்பிடமா?
இல்லை இது காதலின் இறப்பிடாம ?

வலி
பிறப்பின் போது தாய் கண்ட உடல்  வலி
மரணம் கண்டு எனக்கு ஜனனம் தரவே
நாம் விரும்பியும் காலம் நமை பிரிக்கும் போது
நாம் சுமகின்ற வலி சற்று அதிகமே உள வலியனதால்
இங்கு ஜனனம் ஆனா காதல் மரணம் ஆவதனால் 

  
உன்னை
என் கண்களே உன்னை வஞ்சிக்கிறேன்
அவள் என் இதயம் வரும் வரை  வழி கொடுத்து
மீண்டும் அவளை  திருப்பி அனுப்ப வழி தெரியாமல்
உன் நீலி கண்ணீர் ஆறுதல் மட்டும்  தேவை இல்லை

  
  

No comments:

Post a Comment