Tuesday 13 March 2012


போட்டி கவிதைகள்
ஒரு சொல் தந்து
அந்த சொல் ஒரு தடவை ஆவது பாவித்து ஒரு கவிதை


கற்று
பிறந்ததும் அழுது கொண்டு வந்தாய்
மழலையில் அழுது  அடம் பிடித்தாய்
இளமையில் அழுது காதல் வளர்த்தாய்
முதுமையில் அழுது பிரார்தனை செய்தாய்
சுவாசிக்க தொடங்கி நிக்கும் வரை உனக்காக அழுத நீ
உன் இறப்பின் போது மட்டும் உனக்காக பிறர் அழ
கற்று கொடுத்து சென்றாய்

கொண்டாய்
நீதான் அடம் பிடித்து என்மேல்  அன்பு  கொண்டாய்
நான் இன்றி வாழேன் என உன்னுள் உறுதியும் கொண்டாய்
உன் அன்பால்  என் அன்பு வென்றாய், ஏன் இப்படி காதல் கொண்டாய்
உன்னை பிரிந்து வாழேன், என்னுள்   நீ நிலை கொண்டாய்
ஆதலினால் உன் இறப்பில் கூட என்னை  இணைத்து கொண்டாய்    

அருகில்
அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட
ஆரும் அற்ற தனிமையின் வேதனையே மேல்
நான் உன்வீட்டு வாசல் படியில் இல்லை
பரிதாபம் பார்த்து நீ அன்பு பிச்சை போட
புரிந்து கொள் நான் நிற்பது  உன் இதய வாசலில்
உன் இதயத்தில் இடம் தருவாய் என்ற நம்பிக்கையில்

No comments:

Post a Comment