Tuesday 13 March 2012

அதி காலை த‌ந்த‌ சுக‌ம்


அதி காலை த‌ந்த‌ சுக‌ம்


 
ஊர் நடுவில் அமைந்த கோவில்
எமை எல்லாம் காத்து நிற்கின்ற‌ விநாயகர்
உற்சாகம் தருகின்ற ஆலய மணி ஓசை

கொண்டை போட்ட எங்கள் வீட்டு ஆண்மகன்
கூரைகளின் மேல் சேவள் அறை கூவள் விடுகிறான்
விடிந்தது காலை தொடங்கட்டும் வேலை

விடிகின்றது காலை ஆனாலும்
என் விழிகள் மட்டும் விழிக்க மறுக்கிறது
அதிகாலையில் தூங்கும் சுகத்திற்கு ஈடாக ஏதுண்டு

முதலில் விழித்தெழுகின்ற என் அம்மா
அடுப்படியில் தாளம் போடுகிறார் அந்த சத்ததில்
அப்பா எழும்பி சுதி சேராமால் கத்துகிறார்

அப்பாவின் அதிகாலை புலம்பல்
பக்கத்து வீட்டுல விளக்கு எரியுது
இவங்கள் இன்னும் எழும்பல படிக்கிறதிற்கு

தீடீர் என்று பின் முதுகில் ஒரு இடி
துள்ளி எழுந்திருந்தேன் கொலை வெறியோடு
அது என் அம்மா அன்பான அதிகாலை வில்லி

தலை விரி கோலாமாக தலையை சொறிஞ்சபடி
வீட்டு முற்றத்தை பெருக்கி கொண்டிக்கும் அக்கா
பேய் கூட‌ பார்த்தாலே பயந்தோடும் ஒரு தோற்றம் அது

அதிகாலை விழிப்பது கொடுமை தான்
ஆனாலும் காலையில் படிப்பது ஒரு சுகம் தான்
ஒரு தன்னம்பிக்கையுடன் இன்று பாடசாலை செல்லலாம்

சாதரண குடும்பத்து தலைவன் என் அப்பா
அம்மாவை சீக்கிரம் தோட்டத்திற்கு வர சொல்லிவிட்டு
மண்வெட்டியுடன் அவர் தோட்டம் செல்கிறார்

நான் பாடசாலை செல்ல ஆயுத்தம் ஆகின்றேன்
அடுப்படியில் இருந்து வரும் முட்டை பொரியலின் வாசனை மூக்கை நுளைக்கிறது இன்னிக்கு புட்டு சாப்பாடு

அம்மா போய்ட்டு வாறேன் என்று சொல்லிட்டு
எனது துவிச்சக்கர வண்டி நோக்கி வருகிறேன்
அக்கா ஒரு பள்ளி ஆசிரியை எனக்கு முன்னே போய்விட்டார்

பாடசாலக்கு செல்லும் சாலையில்
வழியில் கண்ணில் பட்ட‌ காலை காட்சிகள்
மனதிற்கு இதமாக இருந்தது

உதயவண் உலா வர‌ ஆர‌ம்ப‌ம்
தூக்கம் கலைகின்ற‌ன‌ மலர்கள்
மரகதம் தேடும் வண்ணத்து பூச்சிகள்

எனை போல‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளும்
வெள்ளை ஆடையில் எறும்பின் வேக‌த்தோடு
ஒரு திசையை நோக்கி விரைவ‌து தனி அழகு

அதிகாலை குளிர் சேர்ந்த காற்று
மேனி த‌ழுவி செல்லும் போது
ம‌ன‌தினில் ஒரு உற்சாக‌ம் பிற‌க்கிற‌து

விநாயாக‌ர் கோவிலை க‌ட‌க்கும் போது
ஒரு கையால் கும்பிட்டு செல்வ‌து
சாமி கோவிக்காத‌ என்று சொல்லி செல்வேன்

பெரிய‌ வ‌ய‌ல் வெளி,இரு பக்கமாக‌ ப‌னை ம‌ர‌ காணிகள்
ஒரு ப‌க்கமாக‌ வீடுக‌ள், இன்னொரு ப‌க்க‌மாக‌ கோவில்
அதில் ஒரு ப‌க்க‌மாக‌ எங்க‌ள் ஊர் பெரிய‌ பாட‌சாலை

க‌திர‌வ‌ன் த‌லைக்கு மேலே வ‌ந்து விட்டான்
இறுதியாக‌ பாட‌சாலை வ‌ந்த‌டைந்தேன்
அதி காலை த‌ந்த சுக‌த்தை விட்டு வில‌க‌ ம‌ன‌ம் இல்லாம‌ல்...

No comments:

Post a Comment