Tuesday 13 March 2012

மாற்றம் தேவை

மாற்றம் தேவை


நான் தனியாக இல்லை...
என்னை நானே நெறிப்படுத்த‌...
என்னை பெற்றவர்க்ள்...
என்னுடன் பிறந்தவர்கள்...
என்னுயிர் நண்பர்கள்...
ஆண் என்றால் தனிப்பட்ட உளவியல் மாற்றங்கள்...
பெண் என்றால் தனிப்பட்ட உளவியல் மாற்றங்கள்...
நான் வளர்ந்த சுற்றாடல்...
எனது கலாச்சாரம்...
எனது சமூகம்...
இவை அனைத்தும் மீறி...
நான் எனக்காக முடிவெடுத்தால்...
இலவசமாக நிறைய பட்டங்கள்...
சுயநல வாதி...
நடத்தை கெட்டவள்‍‍‍‍‍‍‍‍‍‍-இன்னும் பல‌...
பிறருக்காக வாழ்வது ஒரு சுகம்-இதை...
உன் உதடுகள் சொன்னாலும் உன்...
உள் மனதிற்கே உண்மை புரியும்...
மனிதன் என்பவன் பூமியில் உள்ள உயிர்களில் ஒன்று...
சிரிக்க முடிந்த உயிரினம் மனிதன்-ஆனால்...
சிரிக்க மறந்த மனிதர்கள் தான் கோடி...
சிரிக்க தெரியா மற்ற உயிர்கலை பார்...
இறக்கும் வரை சந்தோசமாக வாழ்கிறது...
என் சந்தோசம் எனபது உன்னை காயப்படுத்துவது அல்ல‌...
மனிதன் வகுத்த நல்வழிகளே இன்று...
அவனுக்கு புதை குழிகள் ஆகின்றது...
சமூகம், சமயம்,கலாச்சாரம் இதன் பெயரால்...
இன்னும் எத்தனை சந்தோசங்கள் சாகடிக்கப் படுமோ?..
எனக்காக‌ வாழ்வதா...
உனக்காக வாழ்வதா...
சமூகத்திறக்காக வாழ்வதா...
குழப்பத்தில் கரைந்து கொண்டிருக்கும்...
ம‌னித‌ வாழ்வை மீட்டெடுக்க‌ ...
மாற்ற‌ம் தேவை...


No comments:

Post a Comment