Tuesday 13 March 2012

என் பிரிவிலும் தொடரும் நட்பு

என் பிரிவிலும் தொடரும் நட்பு



உறவுக‌களின் தொடக்கம் அம்மா நீ ஆனாய்
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்

என் உணர்வுகளில் நான் படைத்த உறவு நட்பு
ஆகவே நான் கூட தாய்மை உணர்கிறேன்

தாயே உன் கருவறையில் நான் வாழ்ந்தவரை
உன் மூச்சு காற்றில் நான் சுவாசித்தேன்

இதயவறையில் வைத்த என் நட்பு வாழ்கிற‌து
என் மூச்சு காற்றும் நிக்கும் வ‌ரை

அம்மா என்ற‌ உற‌வு முத‌ல் அனைத்து
உற‌வுக‌ளையும் காட்டிய‌வ‌ள் நீ

ந‌ட்பு என்ற‌ ஒரு உற‌வில் நான்
அனைத்து உற‌வுக‌ளையும் காண்கிறேன்

அம்மா இல்ல‌மால் உயிர்கள் இவ் உல‌க‌ம்
காண்ப‌த‌ற்கு சாத்திய‌ம் இல்லை

ந‌ட்பு இல்லாம‌ல் உயிர்க‌ள் எவ் உலக‌ம்
சென்றாலும் வாழ்வ‌த‌ற்கு சாத்திய‌மே இல்லை

அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட‌
நீ உன் பிள்ளை காண்பதற்கே

நீ கொண்ட அதே வேதனை காண்கிறேன்
நான் வாழ்ந்த‌ நட்பின் பிரிவுகளில்

நண்பர்கள் பிரியலாம் அனாலும்
நான் கண்ட நட்பு என் பிரிவிலும் தொடரும்
என் உயிர் நண்பர்களலின் நினைவுகளில்
 


No comments:

Post a Comment