Tuesday 13 March 2012

தொடரும் நிகழ்காலம் நட்பு


தொடரும் நிகழ்காலம் நட்பு

அநாதை யாரும் இல்லை என்பதற்காய்
ஆண்டவன் அனுப்பிய அன்பின் அரவணைப்பு

வெறும் நம்பிக்கையில் மட்டும் பூத்த
நாட்கள் நகர்ந்தும் வாட நேய  மலர்

உறவுக்குள் வெளி நின்றாலும் கூட
உன்னை முதலில் புரிந்து இணைந்திருப்பது

மனிதன் பிரிவினை மறந்து வாழ
மனம் விட்டு  பேச  பிறந்த உறவு

உன்னை தொடரும் நிழல்  போல
காலம் கடந்தும் தொடரும் நிகழ்காலம்

உனக்கே உரிய தனிப்பட பெருமை
உன்னை விட என்னை அறிந்தவரில்லை

கருவறையில் தாயில்  துடங்கிய என் பயணம்
கல்லறையில் உன் கையால் முடிய விரும்புகிறேன்

No comments:

Post a Comment