Tuesday 2 October 2018

#கடிதம்.


#கடிதம்.


இதயங்களை இடங்களை இணைத்து 
மொழி அறிவின் ஆயுளை அதிகரித்து
உணர்வும் மொழியும் ஒன்றாக இணைந்த
இணையற்ற உலக தொடர்பாடல் கடிதம்

மன உணர்வுகளின் நிஜ மொழி மாற்றம்
மை கொண்டு எழுதப்படும் மெய் கடிதம்
கையால் எழுதும் கடிதம் அன்பும் அக்கறையும்
உறவை மொழியை அழியாது காக்கும்

சைக்கிள் மணி ஓசை கேட்கும் போதெல்லாம்
மானாக நாம் மாறி துள்ளவது பேரானந்தம்
காகத்தின் கரைதல் கூட காதில் குயில் ஓசை
தபால் காரன் கடவுள் ஆவான் கடிதம் வரமாகும்

கடிதம் எழுதும் நேரம் தேவைகள் மெய்யாகும்
கடிதத்திற்கு காத்திருக்கும் நேரம் சுக வலியாகும்
கடிதம் வாசிக்கும் நேரம் மொழிகள் உயிர் பெறும்
உருவம் இல்லாது  உறவான தொடர்பாடல் கடிதம்

காதலை இணைத்து காதலருக்கு வரமானது
உறவுகளை சேர்த்து உயிரோடு உறவானது
அகிலத்தை இணைத்து தேவைகள் பூர்த்தியானது
கடிதம் காலம் மாறினாலும் மறக்க முடியாத சேவை

By - Prasanth Satkunanathan

No comments:

Post a Comment