Tuesday 18 September 2018

என் சுவாச காற்றே


என் சுவாச காற்றே

நீ இல்லா இடம் பூமியில் இல்லை
நீ இன்றி உயிர்கள் பூமியில் இல்லை
ஐம்பூதங்களில் ஒன்றாய் உயர்வானாய்
பூமியே சுவாசிக்க வரம் தந்த சாமியானாய்

உன்னில் ஒட்சியனை  பிரித்து தந்து
சுவாசிக்க வைத்து பிரியம் வென்றாய்
உலக ஜீவன்களின் உயிர் கொடை வள்ளல்
உலகமே நம்பும் உணர முடிந்த  தெய்வம்

அழகிய பட்டங்கள் காற்றில் பறக்கும் வேளை
அழகிய கனவுகள் கண் முன்னே நிஜமாகின
ஆயிரம் முத்தங்கள் காற்றிற்கு அன்பு பரிசு
காற்றின் அழகிய பயணங்கள் முடிவதில்லை

இயற்கையின் இடைவிடா இலவச காற்றாடி
சூடேற்றி விளையாடும் பகல் நேர காற்று குறும்பு
தாலாட்டி தழுவும் இரவு நேர காற்று இனிமை
இரவும் பகலும் ஊடலும் கூடலுமாய் காதலான  காற்று

இயற்ககையை வேண்டி நின்றால்  அன்பைக்  கொடுக்கும்
இயற்கையை சீண்டிப்  பார்த்தல் அழிவைக்  கொடுக்கும்
மாசு படுத்தின்  பூமி பூகம்பமாய் பதில் தந்து அழிக்கும் 
காற்றை கழிவறையாக்கின் பூமியே கல்லறையாகும்

By Prasanth Satkunanathan ( Heartbeat)

No comments:

Post a Comment