Tuesday 12 March 2019

இதயம்


இதயம்

கருவறையில் உயிரான அன்பின் அடையாளம்
மனிதம் என்பதன் இன்னொரு பெயர்
துடிப்புள்ள வரைதான் ஆயுளின் பயணம் தொடரும்
இதயம் சொல்லும் போதே இரத்தம் தித்திக்கும் 

உலக காதலின் உயர்வான ஒற்றை அடையாளம்
விழிகள் பார்க்க பறிபோக விரும்பும் திருட்டு
காதல் கருவாகி உயிராகி உறவாகும் ஆலயம்
காதல் இல்லா இதயம் உணர்வில்லா உயிர்

கருவிலேயே கட்டப்பட்ட மனித நீதி மன்றம்
மனசாட்சியை மீறியவர்க்கே மக்கள் நீதி மன்றம்
உனை தீர்மானிக்கும் உணர்வுகளின் உதயம்
இதயம் மௌனித்தால் மனிதம் மரணிக்கும்

உடல் ஆரோக்கியம் வாழ் நாளை கூட்டும்
உள ஆரோக்கியம் ஆத்ம சுகத்தை கூட்டும்
உடலுக்கு தேவை  சத்து உள்ளத்திற்கு தேவை சத்தியம்
துடிக்கும் இதயத்திற்கு நடிக்க கற்று கொடுக்காதீர்கள்  

மனிதரை நேசிக்கும்
மனசாட்சியோடு வாழ வைக்கும்
காதலை கருக்கட்டும்
இசையில் தித்திக்கும்
இயற்கையோடு உறவாடும்
இறைவனை ஆராதிக்கும்
இன்பத்தை அள்ளிக்கொடுக்கும்
இதயத்தோடு பேசுங்கள்
இன்பமே முடிவாகும்

வாழ்க்கை வரமாகும்  

By Prasanth Satkunanathan

No comments:

Post a Comment