Tuesday 26 March 2019

கடல்



#கடல்

கடல் எல்லை கொண்டு கடவுள் வரைந்த கோலம் பூமி 
பூமியின் பெரும் பகுதி தான் என்பதே கடலின் கர்வம்
அலை ஓசை  இயற்கையின் இடைவிடா உயிர்த்தாலாட்டு
தரை வாழ் உயிர்களின் கொடை கடல் வாழ் உயிர்கள்

இயற்கை தந்த இலவச  விருந்தும் மருந்தும் கடல்
கருணையின் உறைவிடம் கர்ணனின் மறு வடிவம்
கடலின் வளங்களும்  கொடுக்கும் கொடையும் கோடி
மீனவர்கள் கொண்டாடி வழி படும் குல சாமி கடல் 

நவீனம் வளர்வதற்கு முன்பே உலகை இணைத்த இணையம்
நாடுகளின் கண்டு பிடிப்பிற்கும் பயணத்திற்கும் பாதையாய்
வணிகம் வளர்வதற்கும் செல்வம் பெருகுவதற்கும் கருவியாய்
கடல் வழி பயணம் என்றென்றும் தொடரும் காதல் பயணம்

கடற்கரை காற்று பூமி தாய் முத்தமிடும் உணர்வு
மீள விரும்பா இறுக்கம் கடல் காற்றின் அணைப்பு
உப்பு நீரில் உயிர் பூக்கும் அதிசயம் கடற்காற்று 
சுற்றுலா பிரியர்கள் சுவாசிக்க விரும்பும் காற்று

வெறுக்க முடியா விரும்பி செல்லும் இடம் கடற்கரை
பொன்மாலை வேளை கண்களுக்கு விருந்தாகும் காட்சி 
இயற்கையின் மேடையில் இறைவனின் வர்ணாஜால வித்தை
கவிதையும் காதலும் கற்பிக்கப்படும் நூலகம் கடற்கரை

உன்னைப் பெற்ற தாய் போல கடல் அன்னை
உனக்கு சுகம் சேர்த்த கடலை அசுத்தம் செய்யாதே
உப்புள்ள கடல் ,உப்பிட்ட கடல், உயிர் போல நினை

இயற்கையே கடவுள், வதைக்காது வணங்குவதே இன்பம்

By Prasanth Satkunananthan

No comments:

Post a Comment