2019 ஆம் ஆண்டிற்கு நன்றி!
செல்லும் வருடத்திற்கு சொல்லால் நன்றி சொல்வோம்
வசந்தமோ வருத்தமோ உன்னுள் வாழ்ந்த சுவாசம் வரமே
வாழும் வழி சொல்லி போகும் ஆண்டிற்கு கோடி நன்றி
பிரிகின்ற வலியோடு பிரியாவிடை தருகிறோம் பிரியமான ஆண்டே!
வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு பதில் தந்த ஆண்டு
பல உறவுகள் உடைந்து வாழ்க்கை கேள்வி குறியானது
சில உறவுகள் இணைந்து வாழும் வாழ்வை அர்த்தமாக்கியது
ஆண்டுகள் எங்களை சிதைப்பதில்லை பண்படுத்தும் பாடசாலை
சிலருக்கு வெற்றிகள் மூலம் எதிர்காலத்திற்கான அத்திவாரம்
பலருக்கு தோல்விகள் மூலம் ஏமாற்ற இருள் சூழ்ந்த அஸ்தமனம்
வெற்றி தோல்விகள் எமை ஆட்டிவைக்காது அனுபவம் ஆளவேண்டும்
ஆண்டுக்குள் முழ்கி மூச்சடைப்பதல்ல முத்தெடுப்பதே அனுபவப்பாடம்!
பலருக்கு புதிய பிறப்புகள் மூலம் ஆனந்தம் அள்ளி தந்த வருடம்
பலருக்கு அநியாய இழப்புகள் மூலம் ஆனந்தம் அழித்த வருடம்
ஆண்டுகள் வரமாவதும் சாபமாவதும் மனிதனாய் வாழ்வதில்
மனிதனாய் மாறி வாழ சந்தர்ப்பம் தந்த ஆண்டிற்கு நன்றி
வீட்டையும் நாட்டையும் காக்கும் காவல் தெய்வங்களுக்கு நன்றி
இயற்கையை அழியாது காக்க துடிக்கும் இதயங்களிற்கு நன்றி
மனித மிருகத்தனத்தை கேள்வி கேட்கும் மனதிற்கு நன்றி
அநாதைக்கும் அன்னமிடும் அன்பின் கரங்களுக்கு நன்றி
வரும் வருடங்கள் யாவும் எமை வளப்படுத்தும் ஆய்வு கூடம்
அனுபவங்கள் பல தந்து முன்னேற வழி காட்டும் ஆசான்
செல்லும் வருடம் வரும் வருடத்தை நாம் சந்திக்க வாழ்த்தியது
ஆண்டுகள் பிரிந்தாலும் அனுபவங்கள் பிரியாது தொடரும்
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment