புன்னகை
ஒட்டு
மொத்த மனித இனத்தின் மகத்தான
பெருமை
மனித
தனித்துவத்தின் மீது பிற உயிரின்பொறாமை
ஜனனம்
முதல் மரணம் வரை அழகின் உயிர்த்
துடிப்பு
புன்னகை
கழித்து விழி காணாது மெய் அழகின் தரிசனம்
புன்னகை அழகை
தாண்டிய அன்பான வரவேற்பு
இன்பத்தை நிறுத்தி
துன்பத்தை துரத்தும் காவலன்
உடல் கொல்லா
உயிர் கொடுக்கும் தொற்று நோய்
புன்னகை வீசின்
உயிர் அற்றவையும் உயிர்பெறும்
மழையின் புன்னகையில்
தாய்மை உணர்வாய்
தாய்மையின்
புன்னகையில் கடவுளை காண்பாய்
தந்தையின் புன்னகையில்
நட்பினை அறிவாய்
நட்பின் புன்னகையில்
புது உறவே உதயமாகும்
தனிமையில் புன்னகை
காதலின் சாட்சி
இசையில் புன்னகை
ஸ்வரங்களின் ஆட்சி
உணவில் புன்னகை
சுவையின் ஆட்சி
கஷ்டத்தில்
புன்னகை மன பலத்தின் சாட்சி
பூக்களோடு புன்னகை
காதலுக்கு தூதாகும்
நிலவோடு புன்னகை
இருளே இனிமையாகும்
மழையோடு புன்னகை
இயற்கை செழிப்பாகும்
இயற்கையோடு
புன்னகை வாழ்வே வரமாகும்
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment