Tuesday 12 June 2018

#கவிதை

#கவிதை 

காதலித்துப்  பார் கவிதை வரும் 
இயற்கையை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
இசையை  கேட்டுப்  பார் கவிதை வரும் 
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்

உலகத்தை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
உலகத்தை வெறுத்துப்  பார் கவிதை வரும்
தோல்வி கண்டு பார் கவிதை வரும்
வெற்றி கண்டு  பார் கவிதை வரும்

கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இளமையை  ரசித்துப்  பார் கவிதை வரும்
முதுமையை மதித்துப்  பார் கவிதை வரும்

உண்மையை  உணர்ந்து பார் கவிதை வரும்
பொய்மையை  விரட்டி பார் கவிதை வரும்
உறவுகளை விரும்பி பார் கவிதை வரும்
உறவுகளை இழந்த பின் பார் கவிதை வரும் 

நீதியாய் நடந்து பார் கவிதை வரும்
அநீதியை கடந்து பார் கவிதை வரும்
நீ கவிதையை ரசித்துப்  பார் கவிதை வரும்

உள் உணர்வுகள் சொற்களாய் மொழி மாறும் 
விழி வழி கண்டவை இனி சொல் வழி காண்பாய்
இதயத்துடிப்பினை இனி எழுத்தினில் உணர்வாய் 
உணர்வும் மொழியும் இணைய கருவாகவும் கவிதை


காட்சிகள் மீது கண்கள் கொண்ட காதல் கவிதை 
இயற்கையை ரசிக்கும் இதயத்தில் உதயம் கவிதை 
விழிகளில் அழகானவை மொழிகளில் பேரழகாகும் 
உருவங்கள் மறைந்தாலும் எழுத்தினில் உயிர்வாழும்


கண்களில் விழுந்து எண்ணங்களில்  மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் எண்ணங்களிற்கு  வழி விடு
உன்னில் இருந்தும்  தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

By Prasanth Satkunanathan (HeartBeat)

No comments:

Post a Comment