விடியல்
கோயில் மணி அலாரத்திலும்
கொண்டைச் சேவல்
அக்கறையிலும்
விழிகள்
திறந்து கொள்ள
விடியல்
அழகாய் வர வேற்கிறது
இணைந்தும்
தனித்துமாய் பறவைகள்
ஏழிசையில்
புது மெட்டு எடுத்து
சுரம் சேர்த்து சுகம் தரும்
நேரம்
இயற்கை வழங்கும் இலவசக் கச்சேரி
மெல்ல மெல்ல நேரம் நகர
இருளை உறங்க வைத்து விட்டு
இயற்க்கைக்கு
உயிர் தந்து காக்க
கிழக்கில்
கதிரவன் கண் விழித்தான்
சூரியக் கதிர் கை நீட்டி
அன்பாய்
அழைத்தது வெளியே வா என
உறக்கத்திடம்
இருந்து பிரியா விடை பெற்று
வெளியே வந்தால் விடியலின் அழகு
வியப்பு
காலைக் கதிர்
கண்களோடு கூடல்
பூக்களின்
ஜனனம் புன்னகை
உயிர்களின்
தேடல் உற்சாகம்
மெல்லிய
காற்று சுக சுவாசம்
இயற்க்கைக்கு
உயிர் தந்த விடியல்
கண்களுக்கு
விருந்து தந்த விடியல்
உற்சாகம்
தன்னம்பிக்கை தந்த விடியல்
இறைவன் எழுதிய அழகிய கவிதை
விடியல்
By Prasanth Satkunanathan ( Heartbeat)
No comments:
Post a Comment