Tuesday 15 May 2018

விடியல்


விடியல்


கோயில் மணி  அலாரத்திலும்
கொண்டைச்  சேவல் அக்கறையிலும்
விழிகள் திறந்து கொள்ள
விடியல் அழகாய் வர வேற்கிறது

இணைந்தும் தனித்துமாய் பறவைகள்
ஏழிசையில் புது மெட்டு எடுத்து
சுரம் சேர்த்து  சுகம்  தரும் நேரம்
இயற்கை வழங்கும் இலவசக்  கச்சேரி

மெல்ல மெல்ல நேரம் நகர
இருளை உறங்க வைத்து விட்டு
இயற்க்கைக்கு உயிர் தந்து காக்க
கிழக்கில் கதிரவன் கண் விழித்தான்

சூரியக்  கதிர்  கை  நீட்டி
அன்பாய் அழைத்தது வெளியே வா என
உறக்கத்திடம் இருந்து பிரியா விடை பெற்று
வெளியே வந்தால் விடியலின் அழகு வியப்பு

காலைக்  கதிர் கண்களோடு கூடல்
பூக்களின் ஜனனம் புன்னகை
உயிர்களின் தேடல் உற்சாகம்
மெல்லிய காற்று சுக சுவாசம்

இயற்க்கைக்கு உயிர் தந்த விடியல்
கண்களுக்கு விருந்து தந்த விடியல்
உற்சாகம் தன்னம்பிக்கை தந்த விடியல்
இறைவன் எழுதிய அழகிய கவிதை விடியல்

By Prasanth Satkunanathan ( Heartbeat)

No comments:

Post a Comment