Tuesday 1 May 2018

தெய்வக் குழந்தைகள் இன்பவரம்



தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்

அழுது கொண்டே கண் விழித்தாலும்
மண் வந்த மழலை ஆனந்த வரம்
கைகைளில் தாங்கிய முதல் அனுபவம்
கண்களில் நீர்த்துளி இதழ்களில் புன்னகை

நீண்ட துயில் கொள்ளும் மழலை மாயம்
முகத்தில் நொடிக்கு நொடி மாறும் பாவங்கள்
அழுவதும் சிரிப்பதுமாய் மாறும் ஆனந்த ஆச்சரியங்கள் 
விழி திறந்து பார்க்கக்  காத்திருக்கும் விழி மூடாப்   பெற்றவர்

குழந்தை கண் சிமிட்டும் நொடிகள்
பகல் நேர நட்சத்திரங்களின் தரிசனம்
காந்த விசை தோற்கும் கண்களின் ஈர்ப்பு
நகராது விலகாது நாமெல்லாம் ரசிகராய்

மழலையின் சிரிப்பைக்  கண்டு மறையாத வானவில்
கபடமற்ற சிரிப்பில் கரைந்து போகும் கவலைகள்
யாராலும் வெறுக்க முடியாத விரும்ப்படும்
குழந்தையின் சிரிப்பே பூமியில்  நிஜ அழகு

மழலையின்  குறும்பைக்  கண்டு கோபம் கூட கொஞ்சும்
மண்ணை உண்ட கண்ணனனின் தரிசன அனுபவம்
உணவு நேரப்  போர்க்களம் அழகான ராட்ஷகர்கள் 
வெண்ணை உண்ட கண்ணனாய் கொள்ளை அழகு

அம்மா அப்பா என அடையாளம் தந்து
வாழ்க்கைக்கு அர்த்தமும் சந்தோசமும்  தந்து
அம்மா அப்பா என்று அழைக்கும் நேரம்
ஆனந்த எல்லை வரை கூட்டிச்  செல்லும்
இதை விட இன்பம் ஏது எனப்  பூரிக்க வைக்கும்
தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்


By Prasanth Satkunanathan - Heartbeat

No comments:

Post a Comment