Tuesday, 31 December 2013

அழைக்கின்ற புது வருடம் 
அன்பு கொண்டு அணைக்கட்டும் 

புது வருடம் புது புது எண்ணங்கள் 
புது சக்தி கொண்டு புது வாழ்வு காண்போம் 

இதழ்களில் மொழிகள் பிறவாது 
இதயத்தில் பிறந்து இன்பங்கள் பேசட்டும் 

புன்னகை முகம் கொண்டு 
புது புது முகங்கள் வரவாகட்டும் 

நம்பிக்கை அம்பு எய்து 
இமயம் வரை சென்று இலட்ச்சிய கனி பறிக்கட்டும் 

கருணையும் காதலும் உன்னில் பிறக்க 
கலியுகம் விரண்டோட மதி கொண்டு விதி வெல்

வேற்றுமை கடந்து வெளியே வா 
சொந்தங்கள் இணையட்டும் சுகந்தங்கள் பாடட்டும் 

இயற்கையின் படைப்பில் நாம் மனிதர் 
பிரிவினை கழித்து இணைப்பினை கூட்டு 

வருக வருக புது வருடமே 
வசந்தங்கள் கொண்டு நம் வாசல் வா 

மலர்ந்துட்ட புது வருடம் சிறக்க 
மனிதர் நாம் அன்பால் இணைந்திருப்போம்

By HeartBeat_Santh


Sunday, 29 December 2013

காதல் மழை 

மின்னல் கீற்றாக 
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போன காதல்! 
இடி முழக்கமாய் 
நெஞ்சை தாக்கி நிலை குலைய வைத்து நீங்க !
கடும் மழையாக 
கண்ணீர் மழை அதுவும் மண்ணை நனைத்தது !
மழை காலம் போல் காதல் காலுமும் ஒரு சுகமே !!

By Heartbeat_Santh

Thursday, 19 December 2013

காதல் வரம்

காதல் வரம் 

நீ வந்தால் நீ வந்தால் நேரம் கூடுமடி 
நீ சென்றால் நீ சென்றால் இதயம் வாடுமடி 
நீ செல்லும் நீ செல்லும் பாதை நானுமடி 
நீ பிரிந்தால் நீ பிரிந்தால் உயிரும் பிரியுமடி 
நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி 

நீ சிரிக்க சிரிக்க சிரிக்க 
நான் நொறுங்கி நொறுங்கி தவிக்க 
கண் சிமிட்ட சிமிட்ட சிமிட்ட 
நான் விழுந்து விழுந்து எழும்ப 
அன்பில் விழுகிறேன் பின்பு தவிக்கிறேன் 
அவள் மூச்சினில் நான் சுவாசித்தேன் 
ஒரு ஜென்மத்தில் நான் இருமுறை 
வாழ்கிறேன் அவள் வரத்தினால் 

நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி
By HeartBeat_Santh




Wednesday, 18 December 2013

பிரிந்தாலும் பிரியம் உண்டு

பிரிந்தாலும் பிரியம் உண்டு 

சில சமயங்களில் 
உறவுகளும் நட்புகளும் 
விலகி இருந்தால் தான் விரும்பி இருக்கும் 
சூரியன் தொலைவில் இருந்து ஒளி தந்தாள் தான் 
பூக்கள் மலரும் நெருங்கி வந்தால் மரணிக்கும் 
அதே போல் தான் சில நேரங்களில் 
உறவுகள் எட்டி இருந்தாலும் ஒட்டி இருக்கும் 

By Heartbeat_Santh


Tuesday, 17 December 2013

மன உறுதி

மன உறுதி 

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிக்குமா 
ஆனால் நனையாமல் இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயழ்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்  

By HeartBeat_Santh

Monday, 16 December 2013

இனி இனிக்காது இன்பம்

இனி இனிக்காது இன்பம் 

சோகங்களை மட்டுமே ஏற்ற மனம் 
அழுது அழுது கண்ணீரும் வற்ற
அழ வைக்க வந்த சோகமும் ஏமாற
சோகங்களால் பழகிய மன நிலை 
சந்தோசத்தை ஏற்க முடியாமல்  
சக்தி இழந்து இதயம் நடுங்குகிறது 

By Heartbeat_Santh


Sunday, 15 December 2013

நினைக்க மட்டுமே

நினைக்க மட்டுமே 

மழையில் நனைந்த காலம் 
மழை நீரில் செலுத்த கட்டிய கப்பல்
மணல் வீடு கட்டிய விவேகம் 
அழுது அடம் பிடித்து உண்ணாமல்
போராடி வாங்கி பழகிய சுதந்திரம் 
நிலைக்க முடியா நினைக்க முடிந்த சுகம் 

BY Heartbeat_Santh



Saturday, 14 December 2013

விதி விலக்கான விதி

விதி விலக்கான விதி 

இனிய தோழமை இல்லாத ஏக்கம்  
நிழல் கூட துணை இல்லாத தவிப்பு 
பகல் கூட இருள் போல உணர்கிறேன் 
விரும்பாமல் தழுவும் தனிமை 
என் பிறப்பு கூட ஒரு ஊனம் தான் 
உடலால் அல்ல உணர்வுகளால்  

BY Heartbeat_Santh



Sunday, 8 December 2013

இதயம் துடிக்கும் வரை

நீ பூ போல வந்தாய் புன்னகை தந்தாய் 
நான் காற்றாகி வந்து உன்னில் கலந்தேன் 
நீயும் வந்த நேரம் இனி நிலவும் பாடும் ராகம் 
நானும் நீயும் பேச இனி இருளும் நீளும் கொஞ்சம் 

உன் கண் மொழி தானே
இன்றேன் கவிதை வரி 
உன் குரல் மொழி கூட 
இசையில் ஏழுஸ்வரம்
கண்கள் இணைத்த காதல் 
இனி எம் இமைகள் மூடும் வரை 
இரு உயரில் கலந்த உறவு 
இனி எம் இதயம் துடிக்கும் வரை

By Heartbeat_Santh