Thursday 30 June 2016

#காதல்_களம் 

மறையாத வானவில் 
வண்ணம் மாறாத மங்கை 
தித்திக்கும் அவள் பார்வை 
திகட்டவில்லை ஐம்புலன்களையும் 

மழை கூட மௌனித்து பொழிகிறது 
மாது அவள் மழையை ரசிக்கும் வேளை 
இயற்கையை  மயக்கும் காதல்  ராணி 
இளமையை மாற்ற , மாது இவள் மது 

மழை துளிகளின் போராட்டம் 
மண்ணில் முடிய முன்
உன் மனம் தொட்டு விட 
மழைக்கால காதல் களம் 

#BySPrasanth

No comments:

Post a Comment