Wednesday 23 April 2014

அநாதையான அன்பு



ஒரு சூரியன் உலகத்திற்கே 
ஒளி கொடுகிறது 
எந்தவித பேதமுமின்றி 
ஆனால் மனிதன் 
தன் அன்பினை
சுயநலமாக 
பிறந்து இறக்கும் வரை  
ஒரு சிலருக்கு மட்டுமே 
பகிர்கிறான்  
அன்பு புத்தியில் இருந்து வருகிறதா? 
இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா?
ஒரு வேளை சிறு இதயம் தானே 
என நினைத்து 
பல இதயங்களுக்கு இடம் இல்லையோ?
இல்லை  அல்லது 
அன்பு என்ற பெயரில் பல 
இதயங்களை சிறை பிடிக்க 
மனம் இல்லையோ தெரியவில்லை 
எது எப்படியோ 
இன்று அன்பு கூட அனாதையாக 
யாரும் ஆதரிப்பார் இல்லை 

By Heartbeat-Santh


No comments:

Post a Comment