Saturday 20 April 2013

கவிதை போட்டிக்காக எழுதிய குறுங் கவிதைகள்...!!



கவிதை போட்டிக்காக எழுதிய குறுங் கவிதைகள்...!!
உங்களுக்கும் பிடிக்கும் வாசித்து பாருங்கள் ...:)



என் நண்பன் ...!!

தாய்மை போற்றும் உயர்வனா உறவு
உடன் பிறந்தோர் பிரிய துணையானது
துணைவி தோற்கும் இரு அன்பு போட்டி
பொய் இறந்து உண்மை வாழும் இடம்
உணர்வில் பிறந்து உயிரில் வாழும் (என்) நண்பன்

உணர்வுகள்...!!
கல்லடி பட்டாலும் வலிக்கும்
சொல்லடி பட்டாலும் வலிக்கும்
உயிரை பறிப்பவனுக்கு தண்டனை
உணர்வகள் கொன்றவனுக்கு இல்லை
மனசாட்ச்சி உள்ளவன் மரணிக்கிறான்
இல்லாதவன் மரணிக்க வைக்கிறான்

சரி பிழையில் இட  மாற்றம் ...!!
கெட்டது இல்லமால் நல்லதுக்கு ஏது மதிப்பு
நல்லவனின் சந்தோசமே கெட்டவனை காண்பது
கெட்டவன் வேஷம் இல்லை பிழையில் வாழும் சரி
நல்லவன் தந்திர நரி சரியில் வாழும் பிழை 



நினைவுகள் ...!!
நேசித்து பழகிய சொந்தங்கள் மறைந்தாலும்
உயிருக்கு உயிரான நட்புகள் பிரிய நேர்ந்தாலும்
நிஜமான காதல்கள் நிஜத்தில் இணையாத போதும்
நினைவில் தொடரும்  நினைவுகளும் நிம்மதிதான்

உன்னில் தேடு ...!!
உன்னிடம் இல்லை என்பதற்காய் 
மற்றவரில் இருப்பதை வெறுக்காதே
உன்னிடம் உள்ளவற்றை நேசி
ஒவ்வரு மனிதனிலும் திறமை உண்டு
அதை உன்னில் தேடு பிறரில் அல்ல.....!!!

முதல் ரசிகன்...!! 
என் ஆக்கங்களை முதல் ரசிப்பவன் நான்
என்னுள் வாழும் ரசிகன் வாழும் வரை
என் கலை படைப்புகள் நீ ரசிக்காத போதும்
என் கலை முயற்சி முற்று பெறுவதில்லை

மனிதனின் புலம்பல் ..!!
மனிதன்
வரமாய் கிடைத்த வாழ்கை தரம் கேட்டு வாழுறான்
சுயல போதையை சொர்ர்கம் என நினைத்து ஆடுறான்
மரணம் வரும் என்பது மறந்து மதம் பிடித்து அலைகிறான்
மரண வாயிலில் புலம்பல் கேட்டது வாழாமலே சாகிறேன்

காதல் 
அன்பில்  தொடங்கி அன்பில் முடியனும்
அது வரை தான் காதல் அது தான் காதல்
தொடக்கம் முதல் இறுதி வரை உன் காதல்
ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை எனின்
அந்த தியாக தீண்டா காதல் வேண்டாம்


அன்பு

நீ நான் அணைவராலும்
பொருள் உள்ளவனும் இல்லாதவனும்
எல்லோருக்கும் செய்ய கூடிய நன்மை
காசோ பணமோ அல்ல
கோடி கொடுத்தாலும் கிடைக்காத
இன்ப துன்பங்களில் இணைந்து பகிர்கின்ற
அன்பான வார்த்தைகளும் அணைக்கின்ற கரங்களும் தான்



பொன் & பெண்

பொன்னும் பெண்ணும்  வேறு வேறு தான்
பொன் பட்டை தீட்ட தீட்ட தான் மிளிரும்
பெண் பட்டை பூச பூச தான் ஜொலிக்கும்

 (Makeups) Cheesy


தொடரும் காதல்

பார்த்த பிறகு உடன் வரும் காதல் இனிமை
பட்டாம் பூச்சி போல் சிறகடிக்கும் சில நாள்
பார்த்து பழகி வரும் காதல் இறுதி வரை
அலைக்கும் தரைக்குமான காதல் தினமும்


♥♥♥
அப்பா 
அப்பாவின் பாசம் பலருக்கு தெரிவதில்லை 
புரிந்தவர்க்கு அது ஒரு அழகான தோழமை

♥♥♥
அண்ணன் தம்பி
சண்டையில் வளர்கின்ற அன்பு

♥♥♥
அம்மா 
மனதிலும் உடலிலும் சுமைகளை சுகமாய் சுமப்பதால் 
சுமை பெரிதல்ல அதுவும் குழந்தகளை சுமக்கின்ற போது



1 comment:

  1. vazhkkayin unmayai solvathu pol arthamayirunthu ungal kavithi.thanks!

    ReplyDelete