Wednesday 24 April 2013

நினைத்திருக்கும் வரை



ஆலய மணி ஓசை காற்றில் கலந்து 
தெய்வீக ராகமாய் செவிகளில் விழுந்தது 
சேவலின் கூவலும் குயிலின் பாடலும் 
பறவைகளின் சத்தம் இரை தேட ஆயுத்தம் 
இறுதியாய் இருளை பிரிய மனம் இல்லமால் 
இருள் விலகி ஒளி இமைகள் தானாய் திறந்தன
நீண்ட நீலத் திரையை விலத்திக்கொண்டு 
சூரியன் சுறு சுறுப்பாய் வருவது தெரிகிறது
இனி இந்த ரம்மியமான இனிய  காலை  காட்ச்சி 
தாய் மண் பிரிந்தவற்கு நினைத்திருக்கும் வரை 

No comments:

Post a Comment